
இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதைத் தடுக்க அரசு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ராஜஸ்தானின் சரிஸ்கா புலிகள் சரணாலயப் பகுதியில் இருந்த உம்ரி என்ற கிராமத்தினருக்கு மாற்று இடங்கள் கொடுத்து, அந்த கிராமத்தையே வனப்பகுதியை விட்டு வெளியேற்றி இருக்கிறார்கள். காடுகளை அழித்து மனிதக் குடியேற்றங்கள் நடைபெறும் காலத்தில், புலிகளுக்காக தங்கள் கிராமத்தைக் காட்டுக்குக் கொடுத்த தியாகிகள் இவர்கள்.

தட்டான்பூச்சி போல தோற்றமளிக்கும் இது உண்மையில் 'ஆளில்லா உளவு விமானம்'. அமெரிக்கத் தயாரிப்பு. மூன்று அடி நீளமுள்ள இதில் கேமரா, ரெக்கார்ட்டர் என சகல உளவுக் கருவிகளும் இருக்கும். 'ட்ரோன்' எனப்படும் இந்த ரக ஆளில்லா விமானங்களில் சற்றே பெரிய சைஸை அனுப்பி தீவிரவாதிகளைக் கொல்லவும் செய்கிறது அமெரிக்கா. 'பயணிகள் விமானங்கள் மீது இவை மோதினால் ஆபத்து. செயலற்று இவை நொறுங்கி விழும் இடத்தில் உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தும்' என பலரும் கவலை தெரிவிக்கிறார்கள்!

ரஷ்யாவின் தாஜெஸ்தான் மாகாணத் தலைநகர் மகாச்கலா. காஸ்பியன் கடற்கரையில் இருக்கும் இந்த நகரை ஒட்டி டால்மேஷியன் பெலிக்கன் பறவைக்களுக்கான இயற்கை சரணாலயம் இருக்கிறது. அழிந்துவரும் அரிய இனம் இது. எப்போதும் இல்லாத குளிர் இந்தப் பிரதேசத்தைத் தாக்கி, சரணாலய ஏரி முழுக்க உறைந்துவிட்டது. சாப்பிட, மீன் கிடைக்காததால் அருகிலிருக்கும் துறைமுகத்துக்குக் கிளம்பி வந்துவிட்டன. மீனவர்கள் இந்த விருந்தாளிக்கு மீன் கொடுத்து உபசரிக்கிறார்கள்.
தகவல் : முத்தாரம் இதழ்.
0 comments:
Post a Comment