போர்களில் சில வினோதமான நிகழ்வுகள் நடைபெறுவதுண்டு. ஆரம்ப காலங்களில் போர் விமானங்கள் போருக்கான பொருட்களை கொண்டு செல்ல மட்டுமே பயன்பட்டு வந்தன.
1911 - ல் துருக்கிய போரின் போது விமானங்களில் குண்டுகளை எடுத்து சென்ற இத்தாலிய விமானி ஒருவர், இத்தனை குண்டுகள் வைத்திருந்தும் நேரடியாக போரில் ஈடுபட முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் இரண்டு குண்டுகளை கையில் எடுத்து வீசினார். இப்படி ஆரம்பித்துதான் விமானத்தில் இருந்து குண்டு போடும் (கொடுமை) முறை ஏற்பட்டது.

இரண்டாம் உலக போரின் போது கிரிமியாவின் சூடாக் என்ற இடத்தில் போர் நடந்தது. இதில் ஜெர்மனியும் ரஷ்யாவும் மோதி கொண்டன. ஆவேசமாக நடந்த இப்போர் நாட்டை காக்க அல்ல.
ரஷ்யாவுக்கும் பின்லாந்துக்கும் இடையே நடந்த ஒரு யுத்தத்தில் ஒரு பின்லாந்து வீரரின் உடலுக்குள் பாய்ந்த குண்டு வெடிக்காமல் அப்படியே உடலில் பொதிந்து கொண்டது. எப்போது வெடிக்குமோ ? என்ற மரண பயத்தில் வீரர் மயங்கி கீழே விழுந்தார்.

1942 - ல் ரஷ்யாவின் விமானி கஸ்னேக்லேபாவ் விமானத்தில் பயணம் செய்து கொண்டு இருந்த போது திடீரென்று அவருடைய விமானம் தாக்குதலுக்கு உட்பட்டது. எப்படியோ தப்பித்து விட்டார். பின் அந்த இடத்தில் இருந்து தப்பிக்க நினைத்த போது, விபத்து நடந்த இடத்தில் எதேச்சையாக அங்கு ஒரு ஜெர்மனிய போர் விமானம் நின்று கொண்டு இருந்தது.

இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மன் தலைநகர் பெர்லின் மீது அமெரிக்கா, குண்டு ஒன்று வீசியது, போருக்கு சற்றும் சம்பந்தப்படாத அப்பாவி மக்களை போல அந்த குண்டு ஒரு மிருகக் காட்சி சாலையில் விழுந்து ஒரு யானை இறந்தது.
முதல் உலகப் போரின் போது அமெரிக்க ராணுவம் பயன்படுத்திய துப்பாக்கி பற்றிய தொழில்நுட்பம் ஜெர்மனிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது.

தகவல் : தினத்தந்தி
0 comments:
Post a Comment