
அடுத்த நொடி இவர் கதி என்ன ஆகியிருக்கும் ? பதைபதைப்போடு இந்தக் கேள்வியைக் கேட்டாலும், லி வெய் அதை புன்னகையோடு எதிர்கொள்கிறார். சீனாவின் ஹூபெய் நகரைச் சேர்ந்த இந்த 37 வயது மனிதர், புவி ஈர்ப்பு விசைக்கே சவால் விடுகிறார். புகைப்படக் கலைஞரான இவர் எடுத்த புகைப்படங்களைவிட, இவரை இப்படி பிறர் எடுத்த படங்களே புகழ் பெற்று உள்ளன.
" அடுக்குமாடியின் உயரத்திலிருந்து உதைக்கப்பட்டு விழுவது, வில்லில் அம்பாக சாய்ந்திருப்பது, அந்தரத்தில் நடப்பது, தலைகீழாய் மிதப்பது என எல்லா படங்களிலும் நான் ரிஸ்க் எடுத்திருக்கிறேன். இது சர்க்கஸ் இல்லை: மேஜிக்கும் இல்லை; இயந்திரங்களின் உதவியோடு செய்யப்படும் சின்னசின்ன சாகசங்கள்" என்கிறார் இவர். சில புகைப்படங்களை உற்றுப் பார்த்தால் இவரை பிணைத்திருக்கும் கயிறு தெரியலாம் !




தகவல் : லோகேஷ்.
0 comments:
Post a Comment