Sunday, January 8, 2012

தகவல் களம் !

சுத்தம் சோறு போடும்


அமெரிக்காவில் பொதுவாக திங்கட் கிழமையை 'ப்ளூ மன்டே' (Blue Monday) என்றழைக்கிறார்கள். அன்று தம் வீட்டை சுத்தம் செய்யும் நாளாகத் தேர்ந்தெடுக்கிறாகள். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என அமைந்து விடுவதால், அந்தக் களேபரங்களை சுத்தம் செய்ய அடுத்த நாளான திங்கட் கிழமைதான் அவர்களுக்கு சரிப்படுகிறது.


ஊரும் அதன் வரலாறும்


தமிழ்நாட்டில் சில ஊர்களின் பெயர்கள் காரணப் பெயர்களாகவே இருக்கும். ஒரு உதராணம் : திருவையாறு. திரு என்ற சிறப்பு அடைமொழி சேர்க்கப்பட்டதால் திருஐஆறு. அதாவது திருவையாறு. அந்த ஆறுகள் : காவேரி, குடமுருட்டி, வெட்டாறு, வெண்ணாறு, வடவாறு.


தொல்லைக்காட்சி

தொலைக்காட்சி ஒளிப்பரப்பின் போது கூர்ந்து கவனித்தால் கோடு போன்று பிரிவது தெரியும். உண்மையிலேயே ஒரு படத்தை பல கோடுகளாகப் பிரித்துத்தான் ஒளிப்பரப்புகிறார்கள். இது நாட்டுக்கு நாடு வேறுபடும். நம் நாட்டில் ஒரு படத்தை 625 கோடுகளாகவும், பிரான்சில் 819 கோடுகளாகவும், இங்கிலாந்தில் 405 கோடுகளாகவும் பிரித்து ஒளிப்பரப்புகிறார்கள்.


இரட்டை வேடம்



ஒரேயொரு இந்திய நகரம் தனி யூனியன் பிரதேசமாக அங்கீகரிக்கப்பட்டது சண்டிகருக்கு மட்டுமே கிடைத்திருக்கும் பெருமையாகும். இரண்டு மாநிலங்களுக்கு தலைநகர அந்தஸ்தும், தனி யூனியன் பிரதேச அந்தஸ்தும் கிடைக்க பெற்ற ஒரே இந்திய நகரமும் சண்டிகர் மட்டுமே.



தகவல் : வித்யுத், டி.கார்த்திக்.

0 comments:

Post a Comment