Monday, January 16, 2012

தகவல் களம் !


மஞ்சள் தூளை நீரில் கரைத்திருப்பது போல இருக்கும் இது ஒரு உயிரி ! இதன் பெயர் 'அமீபாய்ட்'(Amoeboid). இதனை ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ (Hakodate) தீவில் உள்ள ப்யூசர் பலகலைக்கழகத்தில் வைத்து ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த வித்தியாசமான உயிரிக்கு மூளை கிடையாது. இவை அழுகிய இலையை உணவாக உண்டு வாழ்வதாகக் கண்டுபிடித்துள்ளனர் விஞ்ஞானிகள்.



உலகிலேயே மிக வேகமாகப் பீய்ச்சி அடிக்கும் வென்னீர் ஊற்று 'ஓல்ட் பெய்த்பூல்' (Old Faithful Geyser). இது அமெரிக்காவில் எல்பின்ஸ்டன் தேசிய பூங்காவில் உள்ளது. இது 64 நிமிடத்திற்கு ஒரு முறை 140 அடி உயரத்திற்கு வென்னீர் ஊற்றை உயர எழுப்பி பீய்ச்சியடிக்கிறது.



கீரிப்பிள்ளையின் மேல் தோலில் அடர்ந்து வளர்ந்துள்ள மயிர்க்கற்றைகளைத் தாண்டி பாம்பின் விஷம் ஏறுவதில்லை. அதனால்தான், பாம்பு எத்தனை முறை ஆவேசத்துடன் சீறிப் பாய்ந்து கொத்தினாலும் கீரிப்பிள்ளை இறப்பதில்லை.



கடலில் வாழும் பாசிகளில் சில வகைகள் உணவாகப் பயன்படுகின்றன. ஜப்பானில் கடல் பாசிகளை வளர்க்கும் தொழிலில் பலர் ஈடுபட்டு உள்ளனர். ஜப்பானில் ஆண்டு தோறும் உற்பத்தியாகும் பாசி உணவின் மதிப்பு சுமார் 30 லட்சம் டாலர்.



தகவல் : ஷம்ரிதி, கே.ஜெயலட்சுமி.

0 comments:

Post a Comment