Friday, March 30, 2012

ஏப்ரல் 1 ஓர் அறிவாளியின் தினம் !


William Harvey (1 April 1578 – 3 June 1657)


'முட்டாள்கள் தினம்' என்று உலக மக்களால் அழைக்கப்படும் ஏப்ரல் முதல் தேதிதான் பதினாறாம் நூற்றாண்டில் ஒரு தலைசிறந்த அறிவாளியைப் பெற்றெடுத்து பெருமை தேடிக் கொண்டது. ஆம், மருத்துவ சரித்திரத்தையே மாற்றி எழுதிய மேதை வில்லியம் ஹார்வி. 1578 - ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி, இங்கிலாந்தின் போகஸ்டன் மாகாணத்தில் பிறந்தார்.

பள்ளியில் படிக்கும் போதே மருத்துவப் படிப்பின் மீது தீராக் காதல் கொண்டிருந்தார் ஹார்வி. நினைத்தது போலவே 1602 - ம் ஆண்டு இத்தாலியிலுள்ள பென்டா பல்கலைக்கழத்தில் மருத்துவ பட்டம் பெற்ற வில்லியம் ஹார்வி, லண்டன் திரும்பி மருத்துவப் பேராசிரியராகப் பணிபுரியத் தொடங்கினார்.

அங்குதான் ஆரம்பித்தது ஹார்வியின் அயராத ஆராய்ச்சி. 14 ஆண்டுகள் முழுமையாக ஆராய்ச்சியில் முழ்கிக் கிடந்தார். மனித உடற் கூற்றை நாம் முழுமையாக கண்டறிந்திடாத காலம் அது. நம் உடலில் ரத்தம் தேங்கிக் கிடக்கிறதா, ஓடிக் கொண்டிருக்கிறதா என்பதை அப்போது பல்கலைக்கழங்களின் பட்டிமன்றத் தலைப்பு. அந்நேரத்தில்தான் அடிவானத்து விடிவெள்ளியாக வெளியானது வில்லியம் ஹார்வியின் ஆய்வு முடிவு.

'சந்தேகமில்லாமல் நம் உடலில் ரத்தம் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. அதை பம்ப் செய்யும் வேலையைத்தான் இதயம் செய்கிறது. ஒவ்வொரு முறை இதயம் துடிக்கும் போதும் இரண்டு அவுன்ஸ் ரத்தம் வெளியேற்றப்படுகிறது. நிமிடத்திற்கு 72 முறை அது துடிப்பதால் ஒரு நாளைக்கு 5700 லிட்டர் ரத்தம் அதன் வழியாகச் செல்கிறது' என்பதையெல்லாம் துல்லியமாகக் கணக்கிட்டுச் சொன்னது ஹார்வியின் ஆராய்ச்சி.

அதுமட்டுமல்ல...அப்படி பம்ப் செய்யப்படும் ரத்தம் நம் உடல் முழுக்க எந்தெந்த ரத்த நாளங்கள் வழியே பாய்கிறது; மீண்டும் சுழற்சி முறையில் அது எப்படி இதயத்தை வந்தடைகிறது; கைகளிலும் கால்களிலும் செல்லும் ரத்த நாளங்கள் எப்படிக் கண்டறிவது என்றெல்லாம் வரைபடமே போட்டுக் காட்டினார் ஹார்வி.




ஆரம்பத்தில் அதை ஏற்காத 'மறுத்துவர்கள்' அந்த ஆராய்ச்சிக்கு 'பைத்தியக்காரத்தனம்' என்று பட்டம் கொடுத்தார்கள். ஆனால், காலப்போக்கில் ஹார்வி எடுத்துரைத்த உண்மைகளை அடிப்படையாக வைத்துத்தான் அவர்களால் மருத்துவமே பார்க்க முடிந்தது. மெல்ல ஹார்வியை ஏற்றுக் கொண்ட இங்கிலாந்து, முதலாம் சார்லஸ் மன்னனுக்கு ஆஸ்தான மருத்துவராக அவரை அமர்த்தி அழகு பார்த்தது. தன் காலம் முழுக்க மனித உடற்கூற்றை ஆராய்ந்து கொண்டே இருந்த ஹார்வி, இன்றைய நவீன மருத்துவத்துக்கு பலமான அடித்தளத்தை அமைத்துவிட்டு, 1657-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி, தனது 79 வது வயதில் மறைந்தார்.

இப்போது சொல்லுங்கள்..... இப்படிப்பட்டவரின் பிறந்த நாளான ஏப்ரல் ஒன்று அறிவாளி தினம்தானே !






தகவல் : சி.பரத்.

எந்திரத் துடைப்பான் (Vacuum Cleaner) உருவான விதம்.....


19-ம் நூற்றாண்டின் மத்தியில் சுத்தம் செய்யும் கருவியைக் கண்டுபிடிக்கப் பலர் முயன்றனர். பிரஷ் போன்ற அமைப்புகளால் தூசியைத் தட்டிவிடுதல் அல்லது சைக்கிளுக்குக் காற்றடிக்கும் கருவியைப் பயன்படுத்தி தூசியை உறிஞ்சிக் கொள்ளும் முறைதான் இருந்தது. மின்சார மோட்டார் கண்டுபிடிக்கப்பட்டதும் இக்கருவிகளின் உருவம் மாறியது. ஒரு மின் துடைப்பான் காற்றை உறிஞ்சி தரை முழுவதும் ஊதிவிடும். தூசி பறந்து வந்து குப்பைத் தொட்டியில் வந்து விழும். குப்பைத் தொட்டியில் விழுவதைவிட பல மடங்கு அதிக தூசி வீடெங்கும் சேர்வதுதான் பிரச்சனை!



1908-ஆண்டின் மின்சார எந்திரத் துடைப்பான்.


இப்படி இயங்கும் கருவிகளில் சில மாறுதல்களைச் செய்த செசில் பூத் (Cecil Booth) என்பவர், வாயில் ஒரு கைக்குட்டையைக் கட்டிக் கொண்டு உறிஞ்சத் தொடங்கினார். அவர் நினைத்தது போல தூசி உறிஞ்சப்பட்டு கைகுட்டையில் சேர்ந்தது. 1901-ல் வேக்குவம் க்ளினர் கண்டுபிடிக்கப்பட இந்த பரிசோதனை முயற்சிதான் காரணம்.


James Murray Spangler

ஆனால், அக்கருவி மிகப்பெரியதாக இருந்ததால், குதிரை வண்டியில் எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது. குதிரைகளும்,வேக்குவம் க்ளினர்களும் வெளியில் இருக்க, ஹோஸ் பைப்பை மட்டும் உள்ளே எடுத்துச் சென்று சுத்தம் செய்தார்கள்.தூசியை உறிஞ்சும் போது எழும் சத்தத்தால் குதிரைகள் பயந்து கத்துவது வழக்கம். 1908-ல் ஜேம்ஸ் எம்.எஸ்.(James Murray Spangler) சிறிய வேக்குவம் க்ளினரை உருவாக்கிய பிறகே, இதன் பயன்பாடு அதிகரித்தது.




தகவல் : முத்தாரம் இதழ்.

Thursday, March 29, 2012

கலக்க மூட்டும் கடல் பாதாளத்தில் ஜேம்ஸ் கேமரூன் !


எதிலும் எப்போதும் சவாலை விரும்புகிற ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் 'டைட்டானிக்' 'அவதார்', போன்ற பெரும் வெற்றி படங்களுக்குப் பின் ஓர் ஆவணப் படம் எடுக்கப் போகிறார். அதுவும் 3 - டி ஆவணப்படம். அதற்காக மனித குலமே தரிசிக்காத கடலின் ஆழத்துக்குச் சென்று படப்பிடிப்பு நடத்த போவதாக அறிவித்திருக்கிறார். அதற்காக அவர் தேர்ந்தெடுத்திருக்கும் இடம் மரியானா டிரென்ச்!

மரியானா என்றதும், நம்ம ஊர் 'மெரீனா பீச்' மாதிரி இருக்கும் என்று நினைத்து விடாதீர்கள். கடல் ஆராய்ச்சியாளர்களே பெயரை கேட்ட உடனே வெலவெலத்துப் போகும் அளவுக்கு 'வேட்டையன் அரண்மனை' இது. பசிபிக் பெருங்கடலுக்குள் 2550 கி.மீ. நீளத்தில் ஒரு அகழி வடிவில் இருக்கும் பெரும் பள்ளத்தாக்கு இது. இதன் ஆழம் 11 கிலோ மீட்டர் என்று இதுவரை கணக்கிடப்பட்டுள்ளது.

அதற்கு மேலும் இருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இந்தக் கணக்குப்படியே நம் பூமியின் மிக ஆழமான கடல் பகுதி இதுதான். ஏன், நிலப்பகுதியில் மட்டும் இத்தனை ஆழமான பள்ளத்தாக்கு இருக்கிறதா என்ன ? கடல், நிலம் இரண்டுக்கும் சேர்த்து பூமியின் ஆழமான பிரதேசம் மரியானா டிரென்ச்தான்.

பொதுவாக நிலவின் மேற்புறத்தைப் பற்றி நாம் அறிந்து கொண்ட அளவுக்குக் கூட கடலின் ஆழத்தைப் பற்றி அறிந்ததில்லை என்பார்கள். இது அறிவியல் பூர்வமாக உண்மை. காரணம், கடலின் ஆழத்துக்குள் சூரிய ஒளி நுழையாது. அந்த கும்மிருட்டுக்குள் நம்மை என்னென்ன விலங்குகள் தாக்கும் என்று சொல்ல முடியாது. எல்லாவற்றுக்கும் மேலே, மேலிருக்கும் கடல் நீரால் வரும் அழுத்தத்தை மனித உடல் தாங்காது.

சாதாரண ஆழ்கடலில் ஆராய்ச்சி செய்யவே இத்தனை தடைகள் என்றால், இந்த கடல் பள்ளத்தாக்கில் கேட்க வேண்டுமா? இதுவரை மனிதன் கண்டறிந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் சென்றிருக்கும் அதிகபட்ச ஆழம் 6000 மீட்டர்கள்தான். மரியானா டிரென்ச் அதைவிட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு ஆழம். இதற்குள் ஒரு மனிதன் இறங்கினால், அவன் உடலின் ஒவ்வொரு இன்ச்சிலும் ஆயிரம் கிலோ எடையை வைத்தது போன்ற அழுத்தம் உண்டாகுமாம். இது நிச்சயமாக ஒரு மனிதனை பிழிந்தெடுத்துவிடும்.

அப்புறம் கேமரூன் மட்டும் எப்படி கேமராவோடு அங்கே போவார்?

அதற்காவே பிரத்யேகமாக ஒரு நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்கியிருக்கிறார். 'டீப் ஸீ சேலஞ்சர்' என்று பெயரிடப்பட்டுள்ள அந்தக் கப்பல் ஒருவர் மட்டும் அமரக் கூடியது. எத்தனை அழுத்தத்தையும் தாங்கக் கூடியது. ஆழ்கடலுக்குள் ஒளியைப் பாய்ச்சுவதற்கும் கேமராக்களை இயக்குவதற்கும் இதில் வசதி உள்ளது.


'டீப் ஸீ சேலஞ்சர்' (Deepsea Challenger)


அங்கே காணக் கிடைக்கும் பொருட்களை ஆராய்ச்சிக்காக எடுத்து வருவதற்கேற்ற ஒரு இயந்திரக் கையும் கொண்டது.

'தனியாக ஒரு கப்பலையே உருவாக்கி, இப்படி ஒரு டிரிப் போகக் காரணம் என்ன ?' என்றால், ஈகோதான் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். ஆமாம், உலகின் மிக ஆழமான பகுதிக்கு யார் முதலில் செல்வது என்று உலக அளவில் 'பெரிய தலைகளுக்கு' மத்தியில் போட்டியே நடக்கிறதாம். ஜேம்ஸ் கேமரூன், இங்கிலாந்தைச் சேர்ந்த கோடீஸ்வரர் ரிச்சர்ட் பிரான்சன் (வர்ஜின் மொபைல் குழுமத் தலைவர்), கூகுள் சேர்மன் எரிக் ஷ்மிட் போன்றவர்கள் அந்தப் பெரிய தலைகளில் அடக்கம். இதில் கேமரூன் முந்திக் கொண்டார்.


ஜேம்ஸ் கேமரூன் (Hollywood Director James Cameron)

"எது எப்படியோ... இதுவரை மனிதன் போகாத அந்த ஆழத்துக்குள் கேமரூன் போகும்போது பல ரகசியங்கள் வெளி வரலாம். அத்தனை ஆழத்துக்குள் வாழும் உயிரினங்கள் என்னென்ன என்பது கூட இதுவரை யாருக்கும் தெரியாது. அந்தப் புதிர்களை இந்தப் பயணம் அவிழ்க்கும். அவர் ஒரு இயக்குனராகவும் இருப்பதால், இது ஆவணப் படமாகவும் உருவாக இருக்கிறது. மொத்தத்தில் இந்த போட்டி, அறிவியல் துறைக்கு ஓர் வரப்பிரசாதம்' என்று கொண்டாடுகின்றனர் ஆழ்கடல் ஆராய்ச்சியாளர்கள்.

இப்படியல்லவோ இருக்க வேண்டும் போட்டி !




தற்போது கிடைத்திருக்கும் செய்தி: 

இயக்குனர் ஜேம்ஸ் கெமரூன் தனது ஆழ்கடல் சாகச பயணத்தை வெற்றிகரமாக முடித்து திரும்பியுள்ளர். அவர் கூறியதாவது :


'இது முற்றிலும் ஒரு வேற்றுக்கிரக அனுபவம், நாம் கனவு காண்பது போன்று மிக பாரிய கடல் வாழ் உயிரினங்களின் வாழ்க்கை சுழற்சி இங்கு நடைபெறுவதாக எனக்கு தென்படவில்லை. இந்த ஆழமான கடல் பரப்பில் நான் பார்வையுற்ற சிலவகை மீன்கள், திமிங்களுக்கு கண்கள் இருப்பதாக தெரிவதில்லை. பெரும்பாலானவை தூய வெள்ளை நிறத்தில் இருந்தன.  ஆனால் அவற்றை முன்னர் பார்த்ததில்லை. அவை இந்த அபூர்வமான சூழலை தழுவி வாழ்கின்றன. சூரிய வெளிச்சமோ, வெப்பமோ இந்த ஆழ்கடலுக்குள் ஊடுருவவில்லை. காரிருளும் கடும் குளிரும் எங்கும் சூழ்ந்திருந்தது.'

இச்சாகச பயணத்தை கெமரூன் முடித்து திரும்புவதற்கு 7 மணி நேரம் தேவைப்பட்டுள்ளது.







தகவல் : கோகுலவாச நவநீதன். 
தற்போது கிடைத்திருக்கும் செய்தி மட்டும் : http://www.4tamilmedia.com 

Wednesday, March 28, 2012

நம்பினால் நம்புங்கள் !


ராக்கெட்டில் பயணித்த முதல் விலங்கினம் - பழ ஈ. 1947-ல் ஒரு மக்காச் சோளத்தோடு இந்த ஈக்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டன.



உலகில் ஆண்டுதோறும் 5 லட்சம் நிலநடுக்கங்கள் நிகழ்கின்றன. அவற்றில் 1 லட்சம் மட்டுமே உணரப்படுகின்றன.



பர்மாவில் Dendrocalamus giganteus என்ற மூங்கில் தினமும் ஒரு மீட்டர் உயரம் வளரும். அதன் அருகில் சில மணி நேரங்கள் நின்றாலே அதன் வளர்ச்சி வேகத்தை உணர முடியும்.




ஒரு கோழியின் வாழ்நாள் கழிவுகளைப் பயன்படுத்தி, 100 வாட் பல்ப்பை 5 மணிநேரம் எரியச் செய்யும் அளவு மின்சாரம் உற்பத்தி செய்யலாம்.



கலிபோர்னியா காண்டார்ஸ் என்ற பருந்து சிறகை அடிக்காமலே 10 மைல் தூரம் பறக்கும்.






தகவல்: முத்தாரம் இதழ்.

Tuesday, March 27, 2012

படம் சொல்லும் சேதி !


கென்யாவின் மாஸாய் பழங்குடி இனத்தவர் மத்தியில் குழந்தைத் திருமணமும், பெண்களை சித்ரவதை செய்யும் பழக்கம் அதிகம் இருக்கிறது. மாஸாய் இளைஞர்களுக்கு கிரிக்கெட் கற்றுக் கொடுத்து அவர்களை நவீனப்படுத்தித் திருத்த அரசு முயற்சி செய்கிறது. அப்படி கிரிக்கெட் ஆடும் ஒரு மாஸாய் இளைஞர்.


புகழ்பெற்ற நார்வே சிற்பி குஸ்தாவ் விஜிலேண்ட் 212 கல் மற்றும் உலோகங்களை வைத்து, தலைநகர் ஆஸ்லோவில் சிற்பப் பூங்காவை உருவாக்கி வருகிறது அந்நாட்டு அரசு. 1939-ம் ஆண்டு தொடங்கி 1949-வரை அவர் செதுக்கிய சிற்பங்களை அழகிய பீடங்களில் வைத்து பூங்கா உருவாகிறது.


மனிதர்களைப் போலவே ஆணாதிக்கம் மிகுந்த சமூகத்தில் வாழ்கின்றன கடல் ஆண் சிங்கங்கள். தங்களுக்கென கடலிலும், கரையிலும் எல்லை நிர்ணயித்துக் கொள்ளும் கடல் ஆண் சிங்கங்கள், அந்த எல்லைக்குள் பெண் கடல் சிங்கங்களை அனுமதிக்கும். தனது வாரிசே ஆனாலும் அனுமதி இல்லை ! மீறி வரும் பிள்ளையைக் கொல்லக் கூடத் தயங்குவதில்லை இவை! அழிந்து வரும் அரிதான இந்த ஆஸ்திரேலிய கடல் சிங்கங்களை 'நேஷனல் ஜியோகிராபிக்' இதழுக்காக படம் எடுத்தவர், மைக்கேல் பேட்ரிக் ஒ' நீல்.






தகவல் : முத்தாரம் இதழ்.

Monday, March 26, 2012

தகவல் துளி !


உருது மொழி வலமிருந்து இடமாக எழுதப்படுகிறது. சீன மற்றும் ஜப்பான் மொழிகள் மேலிருந்து கீழாகவும், மெக்சிகோ மொழி கீழிருந்து மேலாகவும் எழுதப்படுகின்றன.கிரேக்க மொழி இடமிருந்து வலமாக எழுதத் தொடங்கி, பின்னர் வலமிருந்து இடம், இடமிருந்து வலம் என்று மாறி மாறி எழுதப்படுகிறது.



உலகில் அதிக இரத்தம் கொண்ட உயிரினம் திமிங்கலம். இதன் உடலின் 8000 லிட்டர் வரை இரத்தம் இருக்கும்.



கத்தரிக்காய் கொழுப்பைக் கரைக்கும் ஆற்றலுடையது. எனவேதான் பிரியாணியுடன் கத்தரிக்காய் கூட்டு பரிமாறப்படுகிறது.



பகலில் போடும் சிறு துக்கத்தை nap என்கிறோம். இது நெப்போலியன் என்ற பெயரின் சுருக்கம். மாவீரன் நெப்போலியன், பகலில் தவறாமல் சிறிது நேரமாவது தூங்குவாராம்.






தகவல் : நே. இராமன்.

Sunday, March 25, 2012

உடல் - உள்ளது உள்ளபடி....


50 சதவீத கார்பன், 21 சதவீத ஆக்சிஜன், 18 சதவீத நைட்ரஜன், சிறிது கந்தகம்....எல்லாம் சேர்த்துதான் நம் தலைமுடி. நாளொன்றுக்கு சராசரியாக 0.04 செ.மீ. வளரக்கூடிய தலைமுடிக்கு தனிப்பட்ட வாழ்நாள் உண்டு. ஒரு முடியின் அதிகபட்ச ஆயுள் 4 வருடம்தான்.



நாம் அழாவிட்டாலும், நாள் தோறும் நம் கண்களில் 13 சொட்டு கண்ணீர் சுரக்கிறது. அதில் 7 சொட்டு ஆவியாகிறது. மீதி 6 சொட்டு மூக்கிற்குள் இறங்குகிறது.




பெரும்பான்மையான உதட்டுச் சாயங்களில் 30 முதல் 40 சதவீதம் வரையில் விளக்கெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.





தகவல் : நெ.இராமன்.

Friday, March 23, 2012

பேச்சை நிறுத்தும் துப்பாக்கி !


'சும்மா வளவளன்னு பேசி நம்ம வேலையைக் கெடுக்கறவங்களை நிக்க வச்சு சுடணும்' என்று புலம்புகிறீர்களா ? இனிமேல் நிஜமாகவே அப்படிப்பட்டவர்களை சுடலாம்... இந்த சிறப்பு துப்பாக்கியை வைத்து !

ஆம், 'ஸ்பீச் ஜாமிங் கன்' (Speech jamming gun) என்ற இந்தத் துப்பாக்கி, மனிதர்களுக்கு எந்தக் காயமும் ஏற்படாமல் அவர்களின் நான்-ஸ்டாப் பேச்சை மட்டும் கப்சிப் என்று நிறுத்திவிடுகிறதாம். ஜப்பானைச் சேர்ந்த கஸூடகா குரிஹரா, கோஜி சுகடா என்னும் இரண்டு விஞ்ஞானிகள் இணைந்து வடிவமைத்திருக்கும் கண்டுபிடிப்பு இது.

'இனிமேல், பள்ளி வகுப்பறையில் மாணவர்களில் யாராவது வண்டி வண்டியாய்ப் பேசிக் கொண்டிருந்தாலோ, நூலகத்திற்குள் உட்கார்ந்து கதையடித்துக் கொண்டிருந்தாலோ இந்தத் துப்பாக்கித்தான் பேசும்' என்று பன்ச் அடிக்கிறார்கள் அந்தக் கண்டுபிடிப்பாளர்கள்.

சரி, இது எப்படி பேச்சை நிறுத்துகிறது ? ரொம்ப எளிது. தூரத்தில் நிற்கிறவர்களாக இருந்தாலும், அவர்களின் பேச்சை சரியாகப் பிடித்துக் கொள்ளும் ஒரு விசேஷ மைக் இதில் இருக்கிறது. அது பேசிக் கொண்டிருப்பவரின் வார்த்தைகளை அச்சு பிசகாமல் இழுத்துப் பதிவு செய்து கொள்கிறது. அப்படிப் பதிவு செய்த வார்த்தைகள், ஒரு விசேஷ ஸ்பீக்கர் வழியாக ராக்கெட் வேகத்தில் மேற்படி ஆசாமி மேல் திருப்பி ஏவப்படுகிறது. இத்தனையும் 0.2 நொடிக்குள் துரிதமாக நடந்து விடுவதால், பேசுகிறவர் தான் பேசிய வார்த்தைகளையே 0.2 நொடிக்குள் திரும்பக் கேட்கிறார்.


அப்படி நாம் பேசிய வார்த்தைகளே நமக்குக் கேட்டால் நம் பேச்சு சட்டென நின்று விடுவது உளவியல் ரீதியான உண்மை. இதைப் பயன்படுத்திதான் அமைதியை நிலைநாட்டுகிறது இந்த கப்சிப் துப்பாக்கி !

"நூறு அடி தூரத்தில் இருப்பவர்களிடம் கூட இந்தத் துப்பாக்கி செயல்படக் கூடியது. மேலும், சம்பந்தப்பட்டவர் மீது இது ஒலியை செலுத்தும்போது பக்கத்தில் நிற்பவர் கூட அந்த ஒலியை அறியமாட்டார். எனவே, யாருக்கும் எந்த பாதிப்பும் இதனால் இல்லை' என்கிற விஞ்ஞானிகள், இதன் குறைபாடாக ஒன்றே ஒன்றைத்தான் குறிப்பிடுகிறார்கள். அர்த்தமுள்ள வார்த்தைகளைப் பேசினால் மட்டும்தான் இந்தக் கருவி அதைத் திருப்பிச் செலுத்துமாம். அர்த்தமின்றி ஏதேனும் உளறினால் வேலை செய்யாதாம்.






தகவல் : கோகுலவாச நவநீதன்.

Thursday, March 22, 2012

அமைதி, அன்பு, காரம்...


இதற்கு பெயர் என்னவோ 'அமைதி படகு' என்பதுதான்! ஆனால் இது குட்டியூண்டு படகு இல்லை. ஆயிரம் பேர் பயணம் செய்யும் வசதிக் கொண்ட சொகுசுக் கப்பல். ஒரு லட்சியப் பயனத்துக்காக இப்போது இந்தக் கப்பல் உலகம் சுற்றி வருகிறது. 'அழிவை ஏற்படுத்தும் அணு ஆயுதங்களை உலகில் எந்த நாடும் தயாரிக்கவோ, வைத்திருக்கவோ கூடாது' என்பதுதான் அந்த உன்னத லட்சியம். ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்களில் அமெரிக்கா அணு குண்டுகளை வீசியபோது தப்பிப் பிழைத்த 130 பேர் இந்தப் பிரச்சாரக் குழுவில் இடம் பெற்றிருக்கிறார்கள். காயம்பட்டவர்கள்தானே வலியை விவரிக்க முடியும் !


திமிங்கல குடும்பத்தைச் சேர்ந்தவை டால்பின் மீன்கள். இவற்றின் முதல் எதிரி சுறா மீன்தான். ஒரு டால்பின், குட்டி போடும்போது மற்ற டால்பின்கள் அதைச் சுற்றி சுவர் போல நின்று, தாயையும் குட்டியையும் சுறாக்களிடமிருந்து காப்பாற்றுகின்றன. இது மட்டுமில்லை... ஒரு டால்பினுக்கு உடல் நலம் சரியாக இல்லா விட்டால், பிற டால்பின்கள் அதனிடம் வருகின்றன. அதை அப்படியே கடல் மட்டத்துக்கு மேலே தூக்கி வந்து, அது எளிதாக சுவாசிப்பதற்கு உதவுகின்றன.




தென் அமெரிக்க நாடான சிலியிலிருந்து இங்கு வந்தது மிளகாய். சிலி நாட்டிலிருந்து வந்ததால்தான் ஆங்கிலத்தில் 'சில்லி' என்று அழைக்கப்படுகிறது.



தகவல்: வித்யுத், முக்கிமலை நஞ்சன், லோகேஷ்.

Wednesday, March 21, 2012

தகவல் பல விதம் !


இன்னும் சில பல பத்தாண்டுகளில் கச்சா எண்ணெய்க் கிணறுகள் வற்றி பெட்ரோல், டீசல் எல்லாம் தீர்ந்துவிடும் அபாயம் இருக்கிறது. அதனால் உலகெங்கிலும் மாற்று எரிபொருள் தேடும் முயற்சிகள் நடக்கின்றன. பிரேசில் நாடு சர்க்கரையிலிருந்து எத்தானால் தயாரித்து, அதை எரிபொருளாகப் பயன்படுத்தும் முயற்சியில் வெற்றியடைந்து இருக்கிறது.

இதேபோல அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகள் பலவும் மக்காச் சோளத்திலிருந்து எத்தனால் எடுக்கின்றன. டீசல் எஞ்சின்களில் டீசலுக்குப் பதிலாக வெஜிடபிள் ஆயிலைப் பயன்படுத்தும் முயற்சிகளும் நடக்கின்றன.

ஆனால் இவை எல்லாவற்றிலும் ஒரு அபாயம் இருக்கிறது. உணவே எரிபொருள் ஆகிவிட்டால், உலகெங்கும் உணவுப் பஞ்சம் வந்துவிடும். இதற்கு கடலுக்குள் தீர்வு கண்டிருக்கிறார்கள் விஞ்ஞானிகள். கடலுக்கடியில் இருக்கும் பாசிகள், களைச் செடிகள் போன்றவற்றிலிருந்து எத்தனால் தயாரிக்கும் முயற்சிதான் அது!

ஒரு ஸ்பெஷல் என்சைமை இந்த பாசிகள் மற்றும் களைகளில் புகுத்தினால், அதிலிருந்து எத்தனால் கிடைக்கும். மக்கச் சோளத்தில் கிடைப்பதைவிட ஐந்து மடங்கு அதிகம் எத்தனால் கிடைக்கிறது. எதிர்காலத்தில் இதற்காக கடலுக்கு அடியில் யுத்தங்கள் நடக்கலாம். மீண்டும் ஏகாதிபத்தியப் போர்.



உலகில் கிடைக்கும் அத்தனை ரக ஸ்கேல்களாலும் அளந்து முடிவெடுத்துவிட்டார்கள். இவர்தான் சாதனையாளர் என்று! மிகக் குள்ளமாகப் பிறந்ததுதான் இவர் சாதனை. நேபாளத்தைச் சேர்ந்த 72 வயது சந்திர பகதூர் டாங்கி இப்போது கின்னஸால் அங்கீகரிக்கபட்ட உலகின் குள்ள மனிதர்.

'தற்போது உலகில் உயிர்வாழும் மனிதர்களில் மிகக் குள்ளமானவர்', மனித இன வரலாற்றில் இதுவரை உலகில் பிறந்தவர்களிலேயே மிகக் குள்ளமானவர்' என இரண்டு சாதனை சான்றிதழ்களை கின்னஸ் கொடுத்து இருக்கிறது. கின்னஸ் பதிப்பகத்தின் ஆசிரியர் கிரெய்க் கிளாண்டோ நேபாளம் வந்து சான்றிதழ்களை வழங்கினார். சந்திர பகதூரின் உயரம் 54.6 சென்டிமீட்டர். இதற்குமுன் உலகின் குள்ள மனிதராகக் கருதப்பட்டவர், 60 சென்டிமீட்டர் உயரமுள்ள பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜூன்ரே பாலாவிங். அவருக்குத்தான் தெரியும் அவர் வேதனை.



அந்த அழகிய பெட்டியைத் திறந்தால் உள்ளே 49 குட்டி சாக்லேட்டுகள் இருக்கும். பெட்டியின் விலை இந்திய மதிப்பில் 4 லட்சம் ரூபாய். 'அப்படி என்ன தங்கத்துலயா இழைச்சிருக்காங்கா ?' என்று நீங்கள் பொங்கினால்....ஆமாம்.

புகழ்பெற்ற லெபனான் சாக்லேட் நிறுவனமான பாட்சி, அறிமுகம் செய்திருக்கும் 'ஜூவல்லரி சாக்லெட் இது. ஒவ்வொரு சாக்லெட்டும் தங்கம் அல்லது வெள்ளி இழைத்த காகிதத்தால் அழகான வடிவமைப்பு செய்யப்பட்டிருக்கும். மேலே 24 காரட் தங்கத்தில் செய்த பூக்கள், ஸ்வரோஸ்கி கற்கள். பிளாட்டினத்தால் அலங்காரம் என இழைத்திருக்கிறார்கள். சாக்லெட்டை சாப்பிட்டு காகிதத்தைத் தூக்கிப் போட கண்டிப்பாக முடியாது.

ஒரு நேரச் சோற்றுக்கு அல்லல்ப்படும் உலகமடா இது!









தகவல் : லோகேஷ்.

Monday, March 19, 2012

மனிதர்களும் - விலங்குகளும்.....


மனிதர்கள் வெளிநாடு செல்லும்போது கடவுச்சீட்டு தேவை. விலங்குகளுக்கு ? அவற்றுக்கும் சில ஆவணங்கள் தேவைப்படுகின்றன. விலங்குகள் அதிகமாக வந்து இறங்கும் இடமாக, ஜெர்மனியின் பிராங்பர்ட் விமான நிலையம் கருதப்படுகிறது. ஒரு ஆண்டுக்கு சராசரியாக 6 லட்சத்து 30 ஆயிரம் விலங்குகள் வருகின்றன. செல்லப்பிராணிகளாகவும், சரணாலயங்களில் வளர்க்கவும், ஆராய்ச்சி தேவைக்காகவும் இப்படி பயணிக்கின்றன விலங்குகள். அவை புறப்படும் நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ பரிசோதனை நடக்கும். இதற்காக சான்றிதழ்களோடு வந்து இறங்கும் இடத்திலும் திரும்ப பரிசோதனை உண்டு. இப்படி பிராங்பர்ட் விமான நிலையத்தில் சோதனைக்கு ஆளாகும், வியட்நாம் நாட்டு பச்சை நிற தண்ணீர் ஓணான் இது !



ஜெர்மன் தலைநகர் பெர்லினில் இருக்கிறது லெனிட்ஸ் விலங்குகள் சரணாலயம். காட்டிலும் நாட்டிலும் கைவிடப்படும் விலங்குகளை எடுத்துப் பராமரிக்கும் சரணாலயம் இது. இந்த சரணாலயத்தின் சமீபத்திய கதாநாயகன், 'பேபி' என்ற பெயர் கொண்ட பிரெஞ்சு புல்டாக்.

சில நாட்களுக்கு முன் இந்த சரணாலயத்துக்கு ஆறு காட்டுப் பன்றிக் குட்டிகள் அழைத்து வரப்பட்டன. அவற்றின் தாயை யாரோ வேட்டையாடிக் கொண்டிருக்கிறார்கள். குளிரில் தவித்துக் கொண்டிருந்த குட்டிகளை யாரோ காப்பாற்றி, இங்கு கொண்டுவந்து ஒப்படைத்தார்கள். குளிரில் நடுங்கியபடி அவை நின்றிருப்பதைப் பார்த்து பரிதாப்பட்ட பேபி நாய், அருகில் சென்று அவற்றை நக்கி கதகதப்பூட்டியது. பன்றிக் குட்டிகள் ஒவ்வொன்றும் அந்த நாயின் சைஸில் இருந்தாலும், அதன் கருணை குறையவில்லை. ஆறு குட்டிகளையும் குளிர்போக்கி, அவற்றோடு விளையாடியது. இப்போது தினமும் குட்டிகளுக்கு சரணாலய ஊழியர்கள் சரியான நேரத்தில் பால் தருகிறார்களா என்பதைக் கண்காணித்து, அவற்றைப் பார்த்துக் கொள்வது பேபிதான் ! இந்த விநோத பாசக் காட்சியைப் பார்க்க நிறையப் பேர் வருகிறார்கள்.



செல்லமாக நாய் வளர்ப்பார்கள்; பூனை வளர்ப்பார்கள்; ஆனால், போஸ்னியாவைச் சேர்ந்த எமின் ஜூடிக் என்ற இவர் கரடி வளர்க்கிறார். ஆள் உயரத்துக்கு வளர்ந்திருக்கும் இந்த ஆறு வயது கரடிகள் இரண்டையுமே தனது மகன்கள் போல வீட்டில் வளர்க்கிறார். அவர் சாப்பிடுவதையே அவையும் சாப்பிடுகின்றன. ஜூஸ் குடிக்கின்றன. 'வீட்டுக்குள் கரடி வளர்ப்பது அக்கம்பக்கத்தினருக்கு ஆபத்து' என்று அரசு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், வீட்டைச் சுற்றி கம்பி வேலி அமைத்திருக்கிறார் இவர்.






தகவல் : லோகேஷ்.

Sunday, March 18, 2012

ஆச்சரியங்கள் - விநோதங்கள் !


உடலில் எந்த பாகத்தில் வலி ஏற்பட்டாலும் அதை பாரம்பரிய சிகிச்சை மூலம் குணமாக்க முடியும் என்கிறார்கள் ஈரான் நாட்டின் வைத்தியர்கள். 'ஹிஜாமா' எனப்படும் இந்த 'கப்பிங் தெரபி' (Cupping Therapy) சிகிச்சையை பலர் எடுத்துக் கொள்கிறார்கள்.


கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் கப்புக்குள் பேப்பரைப் போட்டு எரித்து, அதன் உட்புறத்தை வெற்றிடமாக்கி, வலியுள்ள இடத்தின் மேல் வைத்து விடுகிறார்கள். கப்பில் உள்ள வெப்பம், அந்த பகுதி தசைகளை அழுத்திப் பிடித்துக் கொள்கிறது. வெப்பம் மெல்ல உடலில் ஊடுருவிச் செல்வதால், அந்த இடம் சிவப்பாகி ரத்தக் கசிவு ஏற்படுகிறது. வழியை ஏற்படுத்தும் கெட்ட இரத்தம் இப்படி வந்துவிட்டால் வலி சரியாகிவிடுமாம். 3500 ஆண்டு பழமையான இந்த சிகிச்சையை ஈரான் மட்டுமில்லாமல், சீனா மற்றும் அரேபியா நாடுகளிலும் பின்பற்றி வருகிறார்கள்.


'உலகின் மிக உயரமான தகவல் தொடர்பு டவர்' என்ற கின்னஸ் சாதனையைப் படைத்திருக்கிறது, ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலுள்ள 'டோக்கியோ ஸ்கை ட்ரீ' (Tokyo Sky Tree). உலகின் மிக உயர்ந்த கட்டிடம் என்ற வகையிலும் இது இரண்டாம் இடத்தைப் பெறுகிறது. (முதலிடம், புர்ஜ் கலிபா, துபாய்).

634 மீட்டர் உயரம் கொண்ட இதன் கட்டுமானப் பணிகள் இந்த பிப்ரவரி 29-ம் தேதி முடிவடைந்தன. ஆனால், அதற்கு முன்பே கின்னஸ் சான்றிதழ் தேடி வந்துவிட்டது. கடந்த வருட இறுதியிலேயே முடிந்திருக்க வேண்டியது. ' 2 மாத தாமதத்துக்குக் காரணம், கடந்த வருடம் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியும், நிலநடுக்கமும்தான்' என்கிறது கட்டுமான குழு.



லீப் வருடத்தில் வரும் பிப்ரவரி 29 என்ற கூடுதல் தினத்தை ஒவ்வொரு நாட்டிலும் வித விதமாக கொண்டாடுகிறார்கள். அமெரிக்காவில் பூனைக்கான உணவுகள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று, அந்த உணவு டப்பாக்களை வைத்தே 10 அடி உயர பூனை ஒன்றை அன்றே உருவாக்கியது. ஆயிரக்கணக்கான இந்த உணவு டப்பாக்களை ஆதரவற்ற பூனைகளை வளர்க்கும் இல்லங்களுக்குக் கொடுத்து விட்டார்கள்.





தகவல் : ப்ரியா.

Thursday, March 15, 2012

பணிவின் அடையாளம் ஃபாரடே.




மின்சாரம் என்பது கட்டுப்பாடு இல்லாத காட்டாற்று வெள்ளம் போல் பாயக்கூடியது. தொலைக்காட்சி முதல் கொண்டு நாம் பயன்படுத்தும் மின்சார உபகரணங்கள் அனைத்தும் அந்தக் காட்டாற்று வெள்ளத்தால் பாதிக்கப்படமால் இருக்கக் காரணம் மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் மின்மாற்றி (Transformer) கருவிகள்தான். அந்த மின்மாற்ற கருவியை உருவாக்கிய அறிவயல் மேதை மைக்கேல் பாரடே (Michael Faraday).

மைக்கேல் பாரடே இங்கிலாந்தில் 1791 - ம் ஆண்டு பிறந்தார். எழ்மை அவரது பள்ளிபடிப்பை பாதியில் நிறுத்தியது. ஒவ்வொரு திங்கட் கிழமையன்றும் மைக்கேலின் தாய் அவருக்கு ஒரே ஒரு ரொட்டியைத் தருவார். அதை 14 துண்டுகளாகப் பிரித்து ஒரு நாளைக்கு இரண்டு துண்டுகள் சாப்பிடுவார். அப்படியொரு வறுமை அவரை வாட்டிய போதும் அவருக்கு புத்தகங்கள் மீது ஆர்வம் அதிகம் .

பழைய புத்தகக் கடைகளுக்குச் சென்று அவசர அவசரமாக புத்தகங்களைப் புரட்டுவார். கடைக்காரர்கள் அவரை விரட்டியடிப்பார்கள். சிலர் இரக்கப்பட்டு புத்தகங்களை வாசிக்கக் கொடுப்பார்கள். அதில் ஒரு கடைக்காரர் ஃபாரடேக்கு புத்தகம் பைண்டிங் செய்யும் வேலை கொடுத்தார். பைண்டிங்குக்கு வரும் பல அறிவியல் புத்தகங்களைப் படித்து அவர் தன் அறிவை வளர்த்துக் கொண்டார்.

மைக்கேல் ஃபாரடே மிகவும் நேசித்த ஒரு விஞ்ஞானி சர்.ஹம்ப்ரி டேவிட். ஃபாரடே ஹம்ப்ரி டேவிட்டுக்கு ஒரு கடிதம் எழுதினார். 'தங்களுடைய ஆய்வு கூடத்தில் ஒரு எடுபிடி வேலை இருந்தால் கூட எனக்கு தாருங்கள்' என்று எழுத, ஃபாரடேயின் ஆர்வத்தைக் கண்டு அவரை தன்னுடைய உதவியாளராகச் சேர்த்துக் கொண்டார்.

படிப்படியாக தன்னை வளர்த்துக் கொண்ட ஃபாரடே, வருடக்கணக்கில் ஆய்வுகள் மேற்கொண்டு தனது 40 வயதில் 'காந்தத்தினால் மின்சக்தியை உருவாக்க முடியும்' என்று நிருபித்தார். அதன் பின்பும் 25 ஆண்டுகள் கடுமையான ஆய்வில் ஈடுபட்டு, மின்சக்தியின் வேகத்தை மாற்ற உதவும் டிரான்ஸ்ஃபார்மர், மின்சக்தியை உற்பத்தி செய்யும் டைனமோ ஆகிய கருவிகளைக் கண்டறிந்தார்.


டிரான்ஸ்ஃபார்மர் கருவி மின்சாரத்தைச் சீர்ப்படுத்த உதவும் என்றால், டைனமோ மின் உற்பத்திக்கே துணை செய்கிறது. இன்றுவரை மோட்டார் வாகன இயக்கத்துக்கு அடியப்படையாகவும் திகழ்கிறது.

இந்தக் கண்டுபிடிப்புகளால் மாமேதை விஞ்ஞானி மைக்கேல் ஃபாரடேவுக்கு 'சர்' பட்டம், ராயல் கழகத்தின் தலைவர் பதவி ஆகியவை தேடி வந்தன. நான் மைக்கேல் ஃபாரடேவாகவே இருக்க விரும்புகிறேன்' என்று கூறி, இரண்டையும் பணிவாக மறுத்துவிட்டார்.

ஃபாரடே 1867 - ம் ஆண்டு மறைந்தார். அப்போது புகழ் பெற்ற மேதைகளை லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் அபே பகுதியில் அடக்கம் செய்வதே பெருமையாகக் கருதப்பட்டது. ஆனால், மைக்கேல் ஃபாரடேவின் உடல், அவர் விருப்பப்படி ஒரு சாதாரண இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

அதன் பிறகு அது சாதாரண இடுகாடா என்ன ?


(மைக்கேல் ஃபாரடேவின் கல்லறை)








தகவல் : சி.பரத்.
பட உதவி : விக்கிப்பீடியா.

Wednesday, March 14, 2012

இப்படியும் சில....


எதையாவது சம்பந்தமில்லாமல் ஒப்பிட்டு சர்ச்சைகளில் மாட்டுவதே விளம்பரத் தந்திரமாக இருக்கிறது. அமெரிக்காவின் மெக்டொனால்டு நிறுவனம் சமீபத்தில் ஒரு விளம்பரம் வெளியிட்டது. 'எங்கள் தயாரிப்பான சிக்கன் துண்டுகளை சாப்பிடுவது, ஆதரவற்ற தெரு நாயை எடுத்து வளர்ப்பதைவிட அப்படி ஒன்று ஆபத்தான விஷயம் இல்லை' என்றது அந்த விளம்பரம். விலங்குகள் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே, விளம்பரத்தை திரும்ப பெற்றுக் கொண்டு மன்னிப்பும் கேட்டு இருக்கிறது அந்த நிறுவனம்.



தேவாங்கு இனத்தைச் சேர்ந்த பிராணி டார்ஸியர் (Tarsier). அழிந்து வரும் அரிய விலங்குகள் பட்டியலில் இருக்கும் இவை பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிகம் வசிக்கின்றன. பெரிய கண்களை உடைய டார்ஸியர்கள் கூட்டம் கூட்டமாக வசிக்கின்றன. இவை தங்களுக்குள் பேசிக் கொள்கின்றன என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். மனிதர்களாலோ, மற்ற விலங்குகளாலோ கேட்க முடியாத அல்ட்ரா சவுண்டு அலைவரிசையில் அதிக சத்தத்துடன் ஒலியெழுப்பி ஒன்றுடன் ஒன்று பேசி கொள்கின்றனவாம்.




இணையதளப் பக்கங்களில் அதிகம் உபயோகிக்கப்படும் உருவம் ஸ்மைலி பேஸ் (Smiley Face). சிரிப்பின் குறியீடாக அறியப்படும் இது மஞ்சள் உருவத்தில் இருக்கும். சிரிக்கும் கோடாக வாய் இருக்கும். 2011 ஜூலையில் கனடா நாட்டில் 2961 பேர் கூட்டமாக நின்று இந்த உருவத்தை உருவாக்கியதே இதுவரை சாதனையாக இருந்தது. மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் 25 பள்ளிகளைச் சேர்ந்த 4444 மாணவர்கள் கூடி இந்த சாதனையை முறியடித்தனர்.




தகவல் : எஸ்.உமாபதி.

Tuesday, March 13, 2012

படம் சொல்லும் சேதி !


தைவானில் நடைபெற்ற '3-டி' கலைக் கண்காட்சியில் ஒரு முப்பரிமாண ஓவியத்தின் வாய்க்குள் நுழைந்து வெளிவரும் ஒரு பெண்.



இதைக் காதல் என்றும் சொல்லலாம். உக்ரைன் நாட்டின் சோபிக் நகரில் க்ளேவென் என்ற இடத்தில் இருக்கும் பயன்படுத்தப்படாத பழைய ரயில் பாதையைச் சுற்றி மரங்கள் இப்படி அடைந்து வளர்ந்து, அந்தப் பாதையை குகையாக்கி இருக்கிறது. நெருங்கியவர்களின் கை பிடித்து இந்தப் பாதையில் நடந்தால் நேசம் கிளர்ந்தெழக்கூடும்!




அந்தக்கால ஜமீன் பங்களாக்களில் புலித்தலை, மான் தலை என்று சுவரில் பாடம் செய்து மாட்டியிருப்பதைப் பார்த்திருக்கலாம். இறந்த விலங்கை இப்படி தோலோடு படம் செய்துவைப்பது, 'டாக்ஸிடெர்மி' (Taxidermy) எனப்படுகிறது. இப்படிப் பாடம் செய்த விலங்குகளை ஏதோ சுவரில் பொம்மை போல மாட்டி வைக்காமல், அவற்றை அலங்கரித்து, மனிதர்கள் செய்வது போன்ற செயல்களை அவையும் செய்வதாக நடிக்க வைத்துக் காட்டுவது இப்போது அமெரிக்காவில் பிரபலமாகி வருகிறது. நிறைய பானம் கட்டி இதைக் கற்று கொள்கிறார்கள்.







தகவல் : முத்தாரம் இதழ்.

Monday, March 12, 2012

காடும்....கானுயிர்களும்


லத்தீன் அமெரிக்க நாடான கோஸ்டாரிக்காவில் வித்தியாசமான வண்ணத்துப் பூச்சிகள் காணப்படுகின்றன. இவை பல வண்ணங்களில் இருப்பது வித்தியாசமானத்தல்ல; இவை எண்களுடன் தொடர்பு கொண்டிருப்பதுதான் வித்தியாசம். ஆமாம்....இவற்றின் ஒவ்வொரு பக்கத்திலுமுள்ள இரண்டாவது இறக்கையின் அடிப்பாகத்தில் 89 என்ற இலக்கம் கொண்ட எண் தெரிவது போல உள்ளது. அதனாலேயே இவை 'எண் வண்ணத்துப் பூச்சிகள்' (Number Butterflies) என அழைக்கப்படுகின்றன. 89-க்குள் வாழ்க்கை இருக்குது இராமைய்யா....



மா, கரி, சிந்தூரம், அத்தி, அறுகு, இம்மடி, கைம்மா இதெல்லாம் யானைக்கான வெவ்வேறு தமிழ்ப் பெயர்கள். களிறு என்றால் ஆண் யானை. பிடி என்றால் பெண் யானை. பெயரைச் சொன்னாலே அதிருமில்லே....



எறும்பு தின்னிகளின் உடல் முழுவதும் முள் போன்ற அடுக்கடுக்கான பட்டை அமைப்பு இருக்கும். இந்தப் பட்டைகளைத் துப்பாக்கிக் குண்டுகளாலும் துளைக்க முடியாது. அத்தனை வலுவானவை. அஞ்சா நெஞ்சன்.



ஒரு மரம் என்றால் அதற்கு இலை இருக்கும். ஒரு காலகட்டத்தில் அந்த இலை உதிரும் ; பிறகு மரம் துளிர்க்கும். இலைகள் வளரும். ஆனால், சந்தன மரத்தில் மட்டும் இலைகள் உதிராது. ஒரு சந்தன மரம் முழு வளர்ச்சியடைய 60 முதல் 100 ஆண்டுகள் ஆகும். இதனால்தான் சந்தனத்திற்கு இத்தனை மதிப்பு.
வயசானாலும் வாசம் போகாது.







தகவல் : வித்யுத்.