Tuesday, January 24, 2012

தகவல் களம் !

ஆமைப் புராணம்


ஆமையை மல்லாக்கப் படுக்க வைத்தால் அது அப்படியே கிடக்கும். தானாகக் குப்புறப் படுக்க அதற்குத் தெரியாது. அப்படியே கிடந்து கடைசியில் இறந்தே போய்விடும். ஆமையின் ஓடு மிகவும் வலுவானது. அதனை பலமாகத் தாக்கினாலும், ஓடும் பாதிக்கப்படாமல், ஆமையையும் அது காக்கும். கடல் ஆமைகள் ஒரே சமயத்தில் 100 முதல் 200 முட்டைகள் வரை இடும். கோழி முட்டை அளவில் இருக்கக் கூடிய இவற்றை கரைக்கு வந்து இட்டுவிட்டு மீண்டும் கடலுக்குள் சென்றுவிடும். சூரிய வெப்பத்தால் முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவந்த உடனே கடலை நோக்கி அவை ஓடும். போகும் வழியிலேயே சில கடல் பறவைக்கும், பிற பிராணிகளுக்கும் இரையாகவும் நேரிடும். ஆமைகள் 150 ஆண்டுகள் வரை வாழக்கூடியதாகும்.


புகைவண்டிப் புராணம்


இந்தியாவில் மேற்குவங்கத்தில் உள்ள கோரக்பூர் புகைவண்டி நிலைய நடைமேடைதான் (Platform) உலக புகைவண்டி நடைமேடைகளிலே மிகவும் நீளமானது. மும்பையிலிருந்து சூரத் நகர் வரை இயக்கப்படும் அதிவேக புகைவண்டியின் பெயர் பறக்கும் ராணி. இந்திய புகைவண்டித் துறையில் மொத்தம் 16 நிர்வாக மண்டலங்கள் உள்ளன.

குறள் புராணம்


குறள் வெண்பா என்ற தமிழ் இலக்கணப்படி அமைந்தது திருக்குறள். இந்த வெண்பா வகையைச் சேர்ந்த வேறு நூல் எதுவுமே தமிழில் இல்லை. திருக்குறள் மட்டுமே.

விதைப் புராணம்


பொதுவாக தாவர விதைகள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு முளைக்கும் தன்மையை இழந்து விடுகின்றன. ஆனால், தாமரையின் விதை மட்டும் 400 ஆண்டுகளுக்குப் பிறகும் முளைக்கக் கூடிய திறன் படைத்தது. இந்த விதையின் மீது கெட்டியான ஓடு இருப்பதே இதற்குக் காரணம்.




தகவல் : வித்யுத்.

0 comments:

Post a Comment