Tuesday, September 27, 2011

பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் 6 தலித்துகள் பலி: உண்மை அறியும் குழு அறிக்கை

சென்ற செப்டம்பர் 11,2011 அன்று பரமக்குடி ஐந்து முக்குச் சாலையில் தமிழக காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியில் 6 தலித்துகள் கொல்லப்பட்டும் சுமார் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்முற்றும் உள்ளதை பல்வேறு அரசியல் கட்சிகளும் மனித உரிமை அமைப்பினரும் கண்டித்துள்ளனர். இது தொடர்பாக பல்வேறு மாநிலங்களையும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் கொண்ட உண்மை அறியும் குழு என்று கீழ்கண்டவாறு அமைக்கப்பட்டது.


உறுப்பினர்கள்
1. பேரா. அ.மார்க்ஸ் மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), சென்னை.
2. கோ. சுகுமாரன் மக்கள் உரிமை கூட்டமைப்பு (FPR) புதுச்சேரி.
3. வழக்கறிஞர் ஏ.முஹம்மது யூசுப். (NCHRO) – தமிழ்நாடு
4. பேரா. ஜி.கே. ராமசாமி மக்கள் ஜனநாயக மன்றம் (People’s Democratic forum)
5. வழக்கறிஞர் கார்த்திக் நவயான் தேசிய தலித் முன்னனி
(
National Dalit forum) ஆந்திரபிரதேசம்.
6. ரேனி அய்லின், கேரளா தேசிய ஒருங்கிணைப்பாளர் NCHRO
7. பேரா. பா.கல்வி மணி மக்கள் கல்வி இயக்கம், திண்டிவனம்.
8. வழக்கறிஞர் ரஜினி –PUHR மதுரை
9. பி.எஸ். ஹமீது –SDPI, தமிழ்நாடு
10. பேரா.சே.கோச்சடை PUHR, காரைக்குடி
11. ஏ.சையது ஹாலித், பாப்புலர் பரண்டு ஆப் இந்தியா, இராமநாதபுரம்
12. மு.சிவகுருனாதன் PUHR, திருவாரூர்.
13. கவிஞர் குட்டி ரேவதி ஆவணப்பட இயக்குனர், சென்னை
14. முனைவர் பரமேஸ்வரி கவிஞர், காஞ்சிபுரம்
15. கு.பழனிச்சாமி PUHR, மதுரை
16. வழக்கறிஞர் முஹம்மது ஷூஹைப் ஷெரீப் NCHRO –கர்நாடகா
17. வழக்கறிஞர் .தய்.கந்தசாமி- (PUHR), திருத்துறைப்பூண்டி
18. தகட்டூர் ரவி (PUHR), கல்பாக்கம்.

இக்குழு செப்டம்பர் 19,20 ஆகிய தேதிகளில் பரமக்குடி, சுற்றுவட்ட கிராமங்கள், இராமநாதபுரம் மதுரை ஆகிய பகுதிகளுக்குச் சென்று சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களையும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருப்பவர்களையும், அரசு அதிகாரிகளையும், பொது மக்களையும் சந்தித்து, விரிவாக அவர்களிடம் பேசி கருத்துகளையும் ஒலி-ஒளி நாடாக்களில் பதிவு செய்து கொண்டது. முதல் தகவல் அறிக்கைகள், காவலில் வைக்கப்பட்டோருடைய விவரங்கள் ஆகியவற்றையும் தொகுத்துக் கொண்டது.

பின்னணி

பரமக்குடி, கமுதி, ராமநாதபுரம், முதலானவை சாதி முரண்பாடுகள் கூர்மையடைந்துள்ள பகுதிகள். கடந்த 50 ஆண்டுகளாகவே இங்கு பல கலவரங்கள் நடைபெற்று வருகின்றன. 1958 - இல் நடைபெற்ற முதுகளத்தூர் கலவரம் அனைவரும் அறிந்த ஒன்று. அப்போது கொலை செய்யப்பட்ட இம்மானுவேல் சேகரன் அப்பகுதி தேவேந்திர குல வேளாளர்களின் வணக்கத்திற்குறிய பெருந்தலைவராக உருப்பெற்றுள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் எப்படி ஒரு திருவுருவாக உருப்பெற்றுள்ளாரோ அதே வடிவில் தேவேந்திரர்களுக்கு இம்மானுவேல் சேகரன் உருவாகியுள்ளார்.


முத்துராமலிஙகத் தேவருடை குருபூசை அவர்களது சமூகத்தவர்களால் அவரது பிறந்த நாளை பெரிய அளவில் கொண்டாடப் படுகிறது. தெய்வத்திருமகன் என அவர் வழிபடப்படுகிறார். இப்பகுதியில் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க பல்வேறு கிராமங்களில் வசிக்கிற தேவேந்திரர்கள் மத்தியில் ஏற்றப்பட்டுள்ள கல்வி முதலிய வளர்ச்சிகளின் விளைவாக இம்மானுவேல் சேகரனின் காலம் தொடங்கி அமைப்பு ரீதியாக இவர்கள் ஒருங்குதிரள்வதும் ஒடுக்குமுறையை ஏற்காத மனநிலையும் தங்களது அடையாளத்தை உறுதி செய்து கொள்ளும் சுயமரியாதை போக்கு அதற்குறிய வகையில் வரலாறு உருவாக்கமும் நடைபெற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனை இதுகாறும் ஆதிக்கம் செய்து வந்த பிரிவினரும் அரசு எந்திரமும் சகித்துக் கொள்ளாத நிலையில் விளைவாக சமூக முரண்கள் கூர்மையடைகின்றன்.

ஒண்டிவீரன் என்கிற அருந்ததியர் இனத்து விடுதலை போராளியை பூலித்தேவன் என்கிற மன்னருக்கு சமமான மன்னராக வரலாறு எழுதுவதை தடுக்க வேண்டுமென நடராசன் (சசிகலா) முதலானோர் கூறிவருவதை இத்துடன் இணைத்துப் பார்க்கவேண்டும். கல்வி மற்றும் ஜனநாயக உணர்வுகளின் வளர்ச்சியின் ஊடாக மேலெழும் அடித்தள மக்களின் அடையாள உறுதிப்பாட்டை, ஆதிக்க சமூகமும் ஆதிக்க சமூகத்தின் மனநிலையயை பிரதிபலிக்கும் அரசும், ஏற்காததன் உச்சக்கட்ட வெளிப்பாடாகவே இந்த துப்பாக்கிச் சூடு அமைந்த்துள்ளது.


1987 முதல் தியாகி இம்மானுவேல் பேரவை என்கிற அமைப்பு இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை (செப்டம்பர் 11) கொண்டாடத் தொடங்குகிறது. ஆண்டுக்காண்டு கூடுகின்ற கூட்டத்தில் அளவும் அதிகரிக்கிறது. 1995-97இல் தென்மாவட்ட சாதிக் கலவரங்கள் ஏற்படுகின்றன.புதிய தமிழகம் கட்சியும் இங்கே வேர் பதித்து செயல்படத் தொடங்குகிறது. இப்பகுதியில் தேவேந்த்திரர்களின் முக்கியத் தலைவர்களாக ஜான் பாண்டியன் முதலானோர் உருப்பெருகின்றனர்.

இதே காலகட்டத்தில் தேவர் குருபூஜை அரசே பங்கேற்று நடத்தக்கூடிய விழாவாக மாறுகிறது. 2007இல் தேவருடைய மறைவின் 50வது நினைவு நாளை ஒட்டி அவரது நினைவிடத்திற்கு அருகில் வசித்துக்கொண்டிருந்த சுமார் 100 தேவேந்திரர்களின் குடும்பங்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன.அரசே முன்நின்று இதைச் செய்தது.


இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளும் இதே போல பெரிய அளவில் கொண்டாடப்படுவதை ஆதிக்க மனங்கள் ஏற்க மறுத்தன. தங்களைப் போலவே தேவேந்திர குலத்தினரும் இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை குருபூஜை என அழைப்பதையும் அவர்கள் ஏறக்கவில்லை. 2007 - ல் தொடங்கி ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய மாதங்களில் ஏதேனும் ஒரு வன்முறையை தேவேந்திரர் மீது ஏவும் போக்கு நடந்துள்ளது. 2007 - ல் வின்சென்ட் என்பவரும் 2009 - ல் அறிவழகன் என்பவரும் சென்ற ஆண்டு (2010 ஆக்ஸ்ட் 30 அன்று) “குருபூஜைக்கு அணி திரள்வீர்என சுவரெழுத்துக்கள் எழுதிய கொந்தகை அரிகிருஷ்ணனும் ஆதிக்கச் சாதியினரால் கொலை செய்யப்பட்டனர்.

இந்த ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தேவேந்திரர்களின் கட்சியாக அடையாளம் காணப்பட்டுள்ள புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த இருவர் சட்டமன்றத்தில் தேர்ந்த்தெடுக்கப்பட்டுள்ளனர். நீண்ட நாள் சிறையிலிருந்த ஜான் பாண்டியனும் விடுதலையானார். இவையெல்லாம் தேவேந்திரர்கள் மத்தியில் ஒரு எழுச்சி வேறெப்போதைக் காட்டிலும் அதிகமாக ஏற்படுத்தியுள்ளது. சென்ற ஆண்டு (2010) இம்மானுவேல் சேகரனின் குரு பூஜையில் பங்கேற்ற அ.இ.அ.தி.மு.க. தலைவர் நயினார் நாகேந்திரன் தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை அரசு விழாவாக நடத்துவோம் என அறிவித்ததும் 2010 அக்டோபர் 9 அன்று இம்மானுவேல் சேகரனின் உருவம் பொறித்த தபால்தலை வெளியிடப்பட்டதும் மிகுந்த எழுச்சியையும் நிறைந்த எதிர்பார்ப்புகளையும் தேவேந்திரர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது. இதை மிகவும் வெறுப்புடனும் ஆதிக்க சாதியினர் பார்த்துவந்தனர். ஆப்ப நாடு மறவர் சங்கம் வெளியிட்டுள்ள ஒரு சுற்றறிக்கையில் இவ்வாறு இம்மானுவேல் சேகரனின் குருபூஜை முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜைக்குச் சமமாக மேலெழுந்து வருவதைத் தடுக்க வேண்டுமென கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இந்தப் பின்ன்ணியில்தான் செப்டம்பர் 09 - ம் தேதியன்று கமுதிக்கு அருகில் மண்டல மாணிக்கம் கிராமத்திற்கு அருகில் உள்ள பள்ளப்பச்சேரி எனும் தலித் கிராமத்தைச் சேர்ந்த பழனிக்குமார் என்கிற 16 வயது தேவேந்திரர் குலச் சிறுவன் கொடுமையாக வெட்டிக் கொல்லப்பட்டான். இது தொடர்பாக தேவர் சாதியைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். கொல்லப்பட்ட சிறுவனுக்கு அஞ்சலி செலுத்த வந்த ஜான் பாண்டியனும் திருப்பி அனுப்பப்பட்டார். இதே நேரத்தில் (செப்டம்பர் 7) அரசு போக்குவரத்துக் கழக பட்டியல் சாதி தொழிற் சங்கத்தினர் தேசியத்தலைவர் தெய்வத் திருமகனார்என இம்மானுவேல் சேகரனை விளித்து பிளக்ஸ் போர்டு ஒன்றை பரமக்குடி நகரத்தில் வைத்தனர். உடனடியாக இதை எதிர்த்து மறத்தமிழர் சேனை என்கிற அமைப்பும் தேவர் சாதியைச் சேர்ந்த வழக்கறிஞர்களும் காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினருக்கு அழுத்தம் கொடுத்தனர்.


தெய்வத்திருமகனார் என்ற பெயரை தேவருக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும், இம்மானுவேல் சேகரனுக்குப் பயன்படுத்தக்கூடாது என்று அவர்கள் கூறினர். இது அவர்களின் சட்டப்பூர்வமான உரிமை என்று கூறி பாதுகாப்பளித்திருக்க வேண்டிய ரெவினியூ நிர்வாகமும் காவல்துறையும் பட்டியல் சாதி அமைப்பினரை வரவழைத்து அந்த பிளக்ஸ் போர்டிலுள்ள இவ்வார்த்தைகளை நீக்க வேண்டுமென வற்புறுத்தினர். அவர்களும் பணிந்து அச்சொற்களை நீக்கவும் செய்தனர். இது தேவேந்திரர்கள் மத்தியில் கடுங்கோபத்தை ஏற்படுத்தவே தெய்வத்திருமகனார் என இம்மானுவேல் சேகரனை விழித்து பல பிளக்ஸ் போர்டுகளை ஆங்காங்கு மறுநாள் அவர்கள் நிறுவினர். இதைக்கண்டு ஆதிக்கச்சாதியினர் மட்டுமல்ல காவல்துறையையும் அரச நிர்வாகத்தையும் சேர்த்து ஆத்திரமடையச்செய்தது. பரமக்குடியில் உள்ள எந்த பிளக்ஸ் போர்ட் அச்சகமும் இது போன்ற பிளக்ஸ் போர்டுகளை அச்சிடக் கூடாதென தடுத்தனர்.


ந்தப் பின்னணியில் தான் செப்டம்பர் 11 அன்று இம்மானுவேல் சேகரன் நினைவு நாளில் அவரது சமாதிக்கு அஞ்சலி செலுத்த வந்த மக்களுக்கும் காவல்துறைக்கும் இடையே முரண்பாடு எழுந்து துப்பாக்கிச் சூட்டில் 6 அப்பாவி உயிர்கள் பலியாகவும் ஏராளமானோர் படுகாயமடையவும் நேரிட்டது.


செப்டம்பர் 11 துப்பாக்கிச் சூடு குறித்து நாங்கள் அறிந்த உண்மைகள்

01. துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தி துப்பாக்கிச் சூட்டை விடவும் கொடுமையான மொழியில் சட்டமன்றத்தில் உரையாற்றிய முதல்வர் ஜெயலலிதா இரண்டு பொய் தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார்.
அவை:

1.முத்துராமலிங்கத்தேவரை இழிவு செய்து மண்டல மாணிக்கம் கிராமத்தில் சுவற்றில் எழுதியதாலே பழனிக்குமார் கொல்லப்பட்டான். இது உண்மையன்று. மண்டல மாணிக்கம் தேவர் சாதி ஆதிக்கம் உச்சமாக உள்ள ஊர். இந்த கிராமத்தில் உள்ள பள்ளியில் பயின்ற தேவேந்திரகுல சிறுவர்கள் அச்சத்தின் காரணமான மாற்றுச்சான்றிதழ் பெற்றுக்கொண்டு வேறு ஊர்களில் உள்ள பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். 2010-11 கல்வியாண்டில் மண்டல மாணிக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்ற 28 தலித் மாணவர்களில் இவ்வாண்டு 23 பேர் டி.சி. பெற்று சென்றுள்ளனர். இக்கிராமத்திற்க்குள் தலித் மக்கள் அச்சமின்றி சுதந்திரமாகக் கூட உலவ முடியாத நிலையில் வேற்றூரில் படிக்கக்கூடிய 16 வயது சிறுவன் பழனிக்குமார் அங்கு சென்று ஏழரை அடி உயரத்தில் ஒரு சுவற்றில் தேவரை இழிவு செய்து எழுதினான் என்று சொல்வதை யாரும் ஏற்க இயலாது.

2. ஜான் பாண்டியன் இந்த கிராமத்திற்கு படை திரட்டிச் சென்றதால் துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டி வந்தது என்பது முதல்வர் சொன்ன அடுத்த பொய்.

ஜான் பாண்டியனைப் பொறுத்த மட்டில் அன்று தூத்துக்குடியில் நடைபெற்ற ஒரு பூப்புனித நீராட்டு விழாவிற்கு வருகிறார். இம்மானுவேல் சேகரன் நினைவு நாளுக்கு அவர் செல்லக்கூடாதென இராமநாதபுரம் ஆட்சியர் தடையுத்தவு இட்டதை அறிந்து அவர் திரும்பவும் திருநெல்வேலி செல்கிறார். அப்போது அவர் கைது செயயப்பட்டு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள துப்பாக்கி சுடும் பயிற்சிப்பள்ளியில் வைக்கப்படுகிறார். எவ்வகையிலும் நிர்வாகம் மற்றும் காவல்துறையின் உத்தரவுகளை மீறுவது என்கிற முனைப்பு ஜான் பாண்டியனிடம் இருக்கவில்லை என்பதே உண்மை. தடையை மீறி அவர் படைதிரட்டிச் சென்றதாக முதல்வர் கூறியுள்ளது அதிகாரிகளின் கூற்றை அவர் அப்படியே ஏற்றுக் கொண்டதையே காட்டுகிறது.


02. செப்டம்பர் 11 அன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூடு முழுக்க முழுக்க காவல்துறையின் திட்டமிட்ட செயலாகச் தெரிகிறது. தேவேந்திரர்களின் ஓர் அடையாளத் திருவிழாவாக மாறிப்போன ஒரு நாளில், அஞ்சலி செலுத்த வந்த அவ்வினத்தலைவர் ஒருவரை தடுத்தது ஒரு முட்டாள்தனமான செயல் மட்டுமல்ல, கலவரத்தையும் தூண்டக்கூடிய செயலும் கூட. தவிரவும் தடுத்தவுடன் பணிந்து திரும்பிய வரை கைது செய்து, இது குறித்த செய்தி அஞ்சலி செலுத்த வந்த மக்கள் மத்தியில் பரவ காரணாக இருந்தது. இன்னொரு மிகப்பெரிய வன்முறையைத் தூண்டும் செயலாக அன்று அமைந்திருந்தது.


03. டி.ஐ.ஜி. சந்தீப் மிட்டல், ஐந்து முக்கில் பொறுப்பாக நிறுத்தி வைக்கப்பட்ட சென்னை அடையாறு காவல்துறை ஆணையர் செந்தில்வேலன், பரமக்குடி நகர காவல் ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் அன்று தேவேந்திரர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் பாடம் புட்டியே தீரவேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் வந்து நின்றதாகவே தெரிகிறது. தியாகி இம்மானுவேல் சேகரன் பேரவை என்ற அமைப்பின் தலைவர் பூ.சந்திரபோஸ் அவர்கள் மிகுந்த நல்லெண்ணத்துடன் ஜான் பாண்டியனைக் கைது செய்தது நல்லதல்ல எனவும் அவரை விடுதலை செய்து சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டும் எனவும் கோரிய போதுசட்டம் ஒழுங்கைப் பற்றி நீங்கள் பேச வேண்டாம். முதலில் அவர்களைக் களைந்து போகச் சொல்லுங்கள் என்று சந்தீப் மிட்டல் கூறி எந்தவித சமாதானத்துக்கும் வாய்ப்பளிக்காமல் நடந்துகொண்டார்.


04. அன்று ஐந்து முக்கில் குவிக்கப்பட்ட காவல் துறையினரின் எண்ணிக்கை சுமார் 2000 என நேரில் பார்த்த பலரும் எங்களிடம் கூறினர். சாலை மறியலுக்கு அமர்ந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 50 - இல் தொடங்கி 200 அல்லது 300 என்ற அளவிலேயே இருந்துள்ளது. கூட்டம் அதிகமாக வரும் என எதிர்பார்த்து அவ்வழியே போக்குவரத்து தடைசெய்யப்பட்டது என்பதை ராமநாதபுரம் ஆட்சியர் அருண் ராயே எங்களிடம் ஒத்துக்கொண்டார். தவிரவும் அவ்வழியே இதர மக்கள் சென்று அஞச்லி செலுத்திவரவும் அவ்வழியே வந்த வாகனங்கள் சென்று வரவும் சாலை மறியலால் எவ்வித பாதிப்பும் ஏற்பட்டிருக்கவில்லை. இந்நிலையில் 2000 ஆயுதம் தாங்கிய காவல்துறையினர் கூடியிருந்த 200 மக்களை அவர்கள் உண்மையிலேயே கல்லெறிந்து வன்முறையில் ஈடுபட்டிருந்தால் லேசான தடியடி அல்லது கண்ணீர்ப்புகையை பிரயோகித்துக் கலைத்திருக்கமுடியும். ஆனால் எந்தவித முன்னெச்சரிக்கையும் இன்றி துப்பாக்கிச்சூட்டை நடத்தி 6 பேரைக் கொன்றுள்ளனர், சந்தீப் மிட்டல், செந்தில் வேலன், சிவக்குமார் ஆகியோர் தலைமையில் இருந்த காவல்துறையினர்.


05. செந்தில் வேலன் ஐ.பி.எஸ். ஏற்கனவே இதே பகுதியில் மாவட்டக் காவல்துறைக் கண்பாணிப்பாளராக இருந்தவர். அவர் இங்கு பணியாற்றிய போது இதே போல இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்தவர்களை நியாயமற்ற முறையில் கைது செய்து (2008 செப் 11) தலித் விரோத அதிகாரி என்கின்ற பெயரை ஈட்டியவர். அடையாறில் இருந்த அவரை இங்கு கொண்டு வந்து அன்றைய தினத்தில் நிறுத்தியதும் உள்நோக்கம் கொண்டு செயல்பட்டதாகவே தெரிகிறது.


06. காவல்த்துறையின் வஜ்ரா வாகனத்தை மக்கள் எரித்தனர் என்று சொல்வதை நம்ப முடியவில்லை. ஐந்து முக்கில் சாலை மறியலில் ஈடுபட்டு இருந்தவர்களை கலைப்பதற்காக கொண்டு வந்து நிறுத்தப்பட்ட காவல்துறையினர் மதுரை ராமநாதபுரம் சாலையில் நீள்வாக்கில் நின்றிருந்தனர். தடியடி மற்றும் துப்பக்கிச்சூடு நடத்தப்பட்டதுடன் மக்கள் எதிரே உள்ள முதுகுளத்தூர் சாலையில் ஓடுவது மட்டுமே சாத்தியமாக இருந்தது. இந்நிலையில் காவல்துறையினருக்கு பின்னால் வந்து நின்ற வஜ்ரா வாகனத்தை கலவரக்காரர்கள் எரித்தனர் என்று சொல்வதை நம்ப முடியாததாக உள்ளது.


07. துப்பாக்கிச்சூட்டின் போது அங்கு நின்று நெற்றிப்பொட்டில் குண்டடிப்பட்டு இன்று மதுரை அப்போலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணிக்கம் குண்டடிபட்டு இறந்தவரை தூக்கிச்சென்று காப்பாற்ற முயன்ற மணிநகர் அம்பேத்கர் மன்றச் செயலாளர் சுரேஷ், கடுமையாக அடிக்கப்பட்டு இன்று ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஓய்வு பெற்ற தலைமைஆசிரியர் திரு.வெள்ளைச்சாமி உள்ளிட்ட பலரும் நம்மிடம் நேரில் கூறியதிலிருந்து, அன்று எந்த வித முன்னெச்சரிக்கையும் இன்றி தண்ணீர் பீச்சியடித்தல்,கண்ணீர் புகை பியோகம் முதலிய எதையும் செய்யாமல் திடீரென துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளனர். மதுரையில் சிந்தாமணி அருகே அன்றே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து இன்று மதிமுக பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்களால் மதுரை அப்போலா மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்படும் 19 வயதான டி.ஜெயபிரசாந்தும் அவ்வாறே கூறினான். துப்பாக்கிச்சூடு நடந்து நீண்ட நேரத்திற்குப்பிறகு தான் உள்துறை அமைச்சகத்தில் இருந்து வந்த செய்தி மூலமாகவே தான் அதை தெரிந்து கொன்டதாக மதுரை மாவட்ட ஆட்சியர் திரு. சகாயம் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


08. துப்பாக்கிச்சூட்டையும் தடியடியையும் மேற்கொண்ட அதிகாரிகளும் கடும் தலித் விரோதப் போக்குடன் இருந்துள்ளனர். சாதியைச் சொல்லி இழிவாக பேசிய வண்ணமே அவர்களை அடித்தும் சுட்டும் வீழ்த்தியுள்ளதை எம்மிடம் பலரும் முறையிட்டனர். இது அரசு நிர்வாகத்தின் மேற்சாதி ஆதரவு மனப்பான்மையும் தலித் விரோதப் போக்கையும் தலித்துக்கள் என்றாலே கலவரம் செய்யக்கூடியவர்கள் என் மனநிலையுடன் அவர்கள் செயல்படுவதற்குச் சான்றாக உள்ளது.


09. துப்பாக்கிச்சூட்டில் 1.பல்லவராயனேந்த்ல் கணேசன்(55) 2. வீராம்பலைச்சேர்ந்த பன்னீர் செல்வம் (50) 3.மஞ்சூரைச் சேர்ந்த ஜெயபால் (19) 4.கீழ்க்கொடுமால்லூர் தீர்ப்புக்கனி(25) 5. காட்டுப் பரமக்குடியை சேர்ந்த முத்துக்குமார் (25) 6. காக்கனேந்ல் வெள்ளைச்சாமி (55) ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர். கணேசன்,வெள்ளைச்சாமி,ஜெயபால் ஆகிய மூவரின் இல்லத்திற்கு சென்று அவர்களது உறவினர்களைச் சந்தித்தோம் இவர்கள் அனைவருமே அந்த நேரத்தில் அங்கு வந்து சிக்கிக்கொண்டவர்களே அன்றி அஞ்சலி செலுத்தும் நோக்குடன் கூட வந்தவர்கள் அல்ல. கணேசன் தன் மகளின் திருமண அழைப்பிதழை விநியோகிக்க வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவர்களைக் கலகம் செய்ய வந்தவர்கள் என்று காவல்துறை கூறுவதை ஏற்கவே முடியாது. பெரும்பாலான துப்பாக்கிச்சூடு இடுப்புக்கு மேலேயே நடத்தப்பட்டுள்ளது. மாணிக்கம் நெற்றிப்பொட்டில் சுடப்பட்டுள்ளார்.

10. சுடப்பட்டவர்களில் சிலர் முறையாக சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் காப்பாற்றப்பட்டிருக்கலாம். இன்று இறந்து போயுள்ள தீர்ப்புக்கனி உயிரிருக்கும் போதே பிணவறையில் கொண்டு வந்து போடப்பட்டுள்ளார்.

பிணவறையில் உயிருடன் ஆட்கள் இருப்பதை அறிந்து புகார் செய்த பின் குமார் என்பவர் காப்பாற்றப்பட்டுள்ளார், தீர்ப்புக்கனி இறந்துள்ளார். தவிரவும் கொல்லப்பட்டவர்களில் குறைந்த பட்சம் இரண்டு பேரேனும் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டு பின் சுடப்பட்டனர் என்ற அச்சம் பலருக்கு எழுந்துள்ளது. வெள்ளைச்சாமியின் உடலைக் கொண்டுவந்த காவல்துறையினர் அவரின் உடலை விரைவாக எரிக்கச்சொல்லி உறவினர்களைக் கட்டாயப்படுத்தியுள்ளனர். அவர்களும் அச்சத்தில் அவ்வாறே செய்துள்ளனர். அவரின் உடலில் குண்டுக்காயம் ஏதும் இல்லை என அவரின் உறவினர்கள் எமக்குத் தெரிவித்தனர். இறந்து போன ஜெயபாலனின் காலிலும் கூட துப்பாக்கிக் கட்டையால் அடித்து உடைத்ததற்கான காயம் இருந்ததாக அவரது மாமியார் குறிப்பிட்டார். இவையெல்லாம் மக்களின் சந்தேகம் உண்மை இருக்கலாம் என்பதைக் காட்டுகின்றன.


11. குண்டடி பட்டு இறந்துபோன ஜெயபால் மற்றும் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜெயபிரசாந்த் ஆகியோரின் குண்டுக் காயம் முதுகுப் புறத்திலிருந்தே தொடங்குகிறது. அவர்கள் தப்பித்து ஓடும்போது காவல்துறையினர் சுட்டிருக்கிறார்கள் என்று இதிலிருந்து தெரிகிறது.


12. காயம்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படவில்லை. நெற்றியில் குண்டடி பட்ட மாணிக்கம் மற்றும் ஜெயபிரசாந்த் ஆகியோர் இதை எம்மிடம் கூறினர். ஸ்கேன் எடுப்பது முதலான ஒவ்வொன்றிற்கும் ஜெயபிரசாந்திடம் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. வைகோ ஐயா தான் என் மகனின் உயிரைக் காப்பாற்றினார் என்று அவரது பெற்றோர் எம்மிடம் புலம்பினர். நீதிமன்றத்தை அணுகி இன்று மாணிக்கம், கார்த்திக் ராஜா ஆகிய இருவரும் மதுரை அப்போலோவில் சிகிச்சை பெற வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.


துப்பாக்கிச்சூட்டுக்குப் பின்

01. சுமார் 10 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. யாரை வேண்டுமென்றாலும் கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யத்தக்கதாக இந்த முதல் தகவல் அறிக்கைகள் எழுதப்பட்டுள்ளன. 1500 பேருக்கு மேல் கைது செய்ய இருப்பதாக காவல்துறை திட்டமிட்டு செய்திகளை ஊடகங்களில் பரப்பி மக்கள் மத்தியில் பீதியை ஊட்டுகிறது. தவிரவும் அவ்வப்போது கிராமங்களுக்குச் சென்று பேருந்து மற்றும் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டிற்குள் கைது செய்ய ஆட்களை கொடுங்கள் என மிரட்டுகின்றனர். பரளை என்ற கிராமத்திலிருந்து வந்த நாகவல்லி, ரேணுகாதேவி உள்ளிட்டப் பெண்கள் செப். - 18ம் தேதியன்று ஒரு போலீஸ் வேனில் வந்த காவல்துறையினர் மிரட்டினர் என்று எம்மிடம் கூறினர்.தவிரவும் மஃப்டியில் இருந்த போலீஸார் சீருடையில் இருந்த போலீசாரை நோக்கி கற்களை வீசுவது போல் பாவனை செய்து வீடியோ படம் எடுத்ததாக எம்மிடம் குறிப்பிட்டனர். நயினார்கோயில், முதுகுளத்தூர், பரமக்குடி, ராமநாதபுரம் ஆகியவற்றைச் சுற்றியுள்ள 50 கிராமங்களில் இரவில் ஆண்கள் பயந்து வீட்டில் தங்கமுடியாத நிலை உருவாகியுள்ளது. எஸ். காவனூரில் இருந்த, அடிபட்ட ஒருவரைக் காண இரவு 8 மணி வாக்கில் நாங்கள் வாகனங்களில் சென்றதைக் கண்ட அக்கிராமத்திலுள்ள அத்தனை ஆண்களும் காவல்துறையே என அஞ்சி ஓடியதை நாங்கள் நேரில் கண்டோம்.


02. தொடக்கத்தில் இரவு நேரத்தில் இவ்வாறு கிராமங்களுக்குச் சென்று மிரட்டினோம் எனவும் பின்னர் அதை நிறுத்திக் கொண்டதாகவும் எம்மிடம் விரிவாக பேசிய ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அருண் ராய் கூறினார். ஆனால் மறுபடியும் வாகனங்களில் கல்வீச்சு நடந்ததால் அப்படிச் செய்ய வேண்டி இருந்தது எனவும் இனி அப்படி நடக்காது எனவும் அவர் எங்களிடம் குறிப்பிட்டார்.


03. 21 பேர் இன்று ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர். வேறுயாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் பலர் பிடித்து செல்லப்பட்டு அடித்துப் பின் விடப்பட்டுள்ளனர். மற்றபடி நகர்புறங்களில் 144 தடை உத்தரவு இருந்தாலும் பெரிய கெடுபிடிகள் இல்லை. எங்கள் குழு சென்று வருவதற்கும் மக்களைச் சந்திப்பதற்கும் பெரிய தடை எதுவும் இருக்கவில்லை எனினும் பெரிய அளவில் பரமக்குடி பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருப்பதும் வருவோர் போவோர் அனைவரும் வீடியோவில் பதிவு செய்யப்படுவதும் முதலான நிகழ்வுகள் மக்கள் மத்தியில் பெரிய அச்சத்தை தொடர்ந்து ஏற்படுத்தச் செய்கின்றது.


04. இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் மட்டும் அரசால் வழங்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு ரூ.15,000 கொடுக்கப்பட்டுள்ளது. பலர் அந்தத் தொகை எங்களுக்கு இன்னும் வந்துச் சேரவில்லை என எங்களிடம் குறிப்பிட்டனர். இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு தி.மு.க. சார்பாக ரூ.1 லட்சமும் காங்கிரஸ் கட்சி ரூ 50,000 கொடுத்துள்ளனர்.


கோரிக்கைகள்:

01. முதல்வர் ஜெயலலிதா துப்பாக்கிச்சூட்டை நியாயப்படுத்தி சட்டமன்றத்தில் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கடும் தலித் விரோதப் போக்குடனும், உயர்சாதி ஆதிக்க ஆதரவுபோக்குடனும் அது வெளிப்பட்டுள்ளது. இது தலித் மக்கள் மத்தியில் தமக்கு எந்த விதமான நீதியும் கிடைக்காது என்ற அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது. முதல்வர் ஜெயலலிதா தம் பேச்சிற்கு வருத்தம் தெரிவித்து அதைத் திரும்ப பெற வேண்டும். அது பாரபட்சமற்ற தன்மையை காட்டும்.


02. துப்பக்கிச் சூடு குறித்து அரசு நியமித்துள்ள ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி விசாரணை வெறும் கண் துடைப்பே. இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நீதியும் கிடைக்காது. பணியிலுள்ள நீதிபதியின் தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.

03. தாக்குதல் நடத்திய போலீஸ் அதிகாரிகளிடமே புலன் விசாரணையை அளித்திருப்பது கேளிக்குரியது, சி.பி.ஐ. விசாரணையை உயர் நீதிமன்றத்தின் மேற்ப்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.

04. சந்தீப் மிட்டல், செந்தில் வேலன், சிவக்குமார் ஆகிய காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அவர்களின் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வ்ழக்கு தொடர வேண்டும்.

05. இறந்தவர்களின் குடும்பத்திற்கு வெறும் 1 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டதை கேலிக்கூத்து என பலரும் சுட்டிக்காட்டி உள்ளனர். இந்த இழப்பீட்டுத் தொகையை 10 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்கும் போது சத்துணவு உதவியாளர் என்பது போன்ற வேலைகள் அல்லாமல், வேறு நல்ல வேலைகள் அளிக்கப்பட வேண்டும்.

06. காயமடைந்தவர்களுக்கு அவர்களது காயத்திற்கு தகுந்தாற்போல் குறைந்த பட்சம் 1 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட வேண்டும்.

07. தலித் கிராமங்கள் பலவும் கடுமையாக அரசால் புறக்கணிக்கப்பட்ட நிலையை நாங்கள் நேரில் கண்டோம். எடுத்துக்காட்டாக, கொல்லப்பட்ட பழனிகுமார் பச்சேரி கிராமத்தில் குடிநீர் வசதி, சாலை வசதி ஏதுமில்லை. சாதி இறுக்கம் மிகுந்த மண்டலமாணிக்கம் ஊரின் வழியாகவே வெளியூர் செல்லக்கூடிய நிலை மாற்றப்பட்டு புறவழிச்சாலை அமைக்கப்ப வேண்டும் என்பது அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. அரசு இவற்றில் உரிய கவனம் செலுத்த வேண்டும்.

08. மண்ட மாணிக்கம் போன்ற கிராமங்களில் உள்ள பள்ளிகளில் தலித் குழந்தைகள் மற்றுச்சான்றிதழ் பெற்று வெளியேறுவது மிகவும் கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது. இது குறித்த விசாரணை ஒன்றை மாவட்டக் கல்வி அலுவலரும் ஆதி திராவிட நலத்துறையும் உடனடியாக மேற்க்கொள்ள வேண்டும்.

09. பரமக்குடி, ராமநாதபுரம், உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை,வருவாய்துறை,உளவுத்துறை ஆகியவற்றிலுள்ள அதிகாரிகளில் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர்கள் எவ்வளவு பேர் தலித்துக்கள் எவ்வளவு பேர் என்ற விவரத்தை அரசு வெளியிட வேண்டும்.

10. இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் அல்லது பிறந்த நாளை அரசு அங்கீகரித்து விழா எடுக்க வேண்டும். இம்மானுவேல் சேகரனின் நினைவிடம் உள்ள சாலை அகலப்படுத்தித் தூய்மைப்படுத்த வேண்டும்.

11. அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள் மத்தியில் தலித் விரோதப் போக்கு ஆதிக்கச் சாதி ஆதரவுப் போக்கும் உள்ள நிலைக்கு எதிராக அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். திருமதி.சிவகாமி அவர்கள், ஆதிதிராவிட நலத்துறைச் செயலாளராக இருந்த போது அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு தலித் பிரச்சனைகளில் உணர்வூட்டுதல் பயிற்சியைத் தொடங்கினார். எனினும் அதுவிரைவில் நிறுத்தப்பட்டது. அரசு இதைத் தொடர வேண்டும். அருண் ராய் போன்ற இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடமே தலித் தலைவர்கள் என்றால் ரவுடிகள் என்பது போன்ற பார்வையும், ஆதிக்கச் சாதிக்குச் சமமாக அடித்தள மக்கள் உரிமை கோரும்போது அது சட்டப்பூர்வமானதாக இருந்தாலும் பொறுப்பற்ற செயல் என்பதாக கருதும் போக்கு இருப்பது கவலையளிக்கிறது.

12. துப்பக்கிச்சூட்டை அரசியல் கட்சிகள் பலவும் கண்டித்துள்ளன. சாதிக்கட்சிகள் குறிப்பாக முக்குலத்தோர் சார்ந்த சாதிக்கட்சிகள் கண்டிக்காதது வருந்தத்தக்கது. துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்துள்ள அரசியல் கட்சிகள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டதை பயன்படுத்தியது குறித்து அழுத்தத்தைத் தொடர்ந்து அரசுக்கு அளிக்க வேண்டும்.

13. பாதிக்கப்பட்டோருக்காக நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் தேடி வரும் வழக்கறிஞர்கள் பொ.இரத்தினம், பசுமலை, ரஜினி ஆகியோரை இக்குழு பாராட்டுகின்றது.


நன்றி : குட்டி ரேவதி வலைப்பூ.



Monday, September 26, 2011

கொட்ட பாக்கும் கொழுந்து வெத்திலயும் போட்டா வாய் மணக்கும் !


வெற்றிலை போட்டவுடன் வாய் சிவப்பது ஏன் தெரியுமா ? பாக்கிலுள்ள கேட்சின்(catechin) என்ற நிறமிப்பொருள்தான் வெற்றிலையின் ஈரத்தன்மையுடனும், சுண்ணாம்புடனும் வினை புரிந்து வாய் சிவக்க வைக்கிறது.


தகவல் : முத்தாரம் இதழ்

அமைதி நோபல் வென்ற வங்காரி மத்தாய் மரணம்


அமைதிக்கான நோபல் பரிசை வென்ற முதல் ஆப்பிரிக்க பெண்மணியான வங்காரி மத்தாய் புற்றுநோயால் மரணமடைந்தார். அவருக்கு வயது 71.


கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள மருத்துவமனையில் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சைப் பலனளின்றி இன்று காலமனார்.

சுற்றுச் சூழல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக அரும்பணியாற்றியதற்காக, அவருக்கு 2004 ஆம் ஆண்டுக்கான அமைதி நோபல் பரிசு வழங்கபப்பட்டது.

பெண்களை ஒருங்கிணைத்து, காடுகளை அழிப்பதற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வந்த 'பசுமைத் தாய்' என்பது கவனத்துக்குரியது.

மேலும், அநீதிக்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் அதிகாரிகளுடன் தொடர்ந்து போராடி வந்திருக்கிறார்.

கென்ய அரசின் சார்பில் பேசிய அந்நாட்டின் துணை அதிபர் கேலொன்சான் முஸ்யோகா, ஆப்பிரிக்காவின் மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவரான வங்காரி மத்தாய் நினைவாக மரங்களை நடுமாறு மக்களைக் கேட்டுக்கொண்டார்.

நோபல் விருது உரையின்போது, "மரங்களை நடும்போது, அமைதி மற்றும் நம்பிக்கைக்கான விதைகளை நாம் நடுகிறோம்," என்று என்று வங்காரி மத்தாய், சீரழிந்து வரும் சமூக மற்றும் சுற்றுச்சூழலில், ஏழ்மையிலும், துன்பத்திலும் இருக்கும் பெண்களுக்கு மரங்கள் பெரும் உதவியாக இருக்கும் என்று கூறியவர்.

கென்ய அரசின் காடுகளை அழிக்கும் திட்டத்துக்கு எதிராக 1977 ஆம் ஆண்டு அந்நாட்டின் கிரீன் பெல்ட் இயக்கத்தைத் தொடங்கி, அவர் 4 கோடியே 70 லட்சம் மரங்களை நட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


வாங்கரி மாத்தாய் அவர்களின் நோபல் ஏற்புரை...


"மரங்களிடமிருந்து கற்றுக்கொள்வது"


நாங்கள் மனமார உண்மையைச் சொல்ல முடியும். இந்தப் பரிசு, அடிப்படை மக்களாகிய எங்களின் கூட்டு உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்று. ஈடுபாடுடையவர்களாக இருப்பதால் நாங்கள் உழைக்கிறோம். எங்களது வேலையை நாங்கள் நம்புகிறோம்.

பலபேர் கேட்கிறார்கள் மக்களாட்சிக்கும், சுற்றுச் சூழலுக்கும், அமைதிக்கும் என்ன தொடர்பு? என்று. அவர்கள், இந்த மூன்று கருதுகோள்களையும் தனித்தனியே சிந்திக்க பழகிவிட்டார்கள். அவர்கள் வளர்ச்சியைப்பற்றி பேசினால், வளர்ச்சியைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். அவர்கள் அமைதியைப் பற்றி பேசினால், அமைதியைப் பற்றி மட்டுமே பேசுகிறார்களேயன்றி வளர்ச்சியைப்பற்றி பேசுவதில்லை. வளர்ச்சியை பற்றி பேசும்போது, வளர்ச்சியைப் பற்றி மட்டும் பேசுகிறார்கள், அப்போது அவர்கள் சுற்றுச்சூழலைப் பற்றியோ, மக்களாட்சியைப் பற்றியோ பேசுவதில்லை. ஆனால் நாங்கள் களத்தில் சென்று பணிபுரியும்போது, நாம் செய்யும் வேலை, உண்மையிலே நீண்ட கால நிலைத்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்றால், எங்களுக்கு ஓர் ஒருங்கிணைந்த முழுமையான அணுகுமுறை வேண்டும் என்பதை உணர்ந்திருக்கிறோம்.

ஆரம்பத்தில், என்னிடம் இந்த அணுகுமுறை இல்லை. 1973க்கும் 76க்கும் இடையில் நான் தேசிய பெண்கள் ஆணையத்தில் உறுப்பினராக இருந்தேன்.கென்யப்பெண்களின் பற்றுணர்வைக் கேட்டேன்: எங்களுக்கு தூய்மையான குடிநீர் வேண்டும், எங்களுக்கு விறகு வேண்டும், எங்களுக்கு உணவு வேண்டும், எங்களுக்கு கட்டுமானப் பொருட்கள், வேலிக்கான பொருட்கள் வேண்டும் எங்கள் மண்ணைப் பாதுகாக்க வேண்டும் இந்தப்பிரச்னைகளை மேலும் மேலும் கேட்க கேட்க அவற்றை நிலத்துடன் இணைத்துப் பார்க்க ஆரம்பித்தேன். பிறகு அப்பெண்களைப் பார்த்து ஏன் நாம் மரங்களை நடக்கூடாது? எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் எங்களுக்கு மரத்தை எப்படி நடுவது என்று தெரியாது என்று சொன்னார்கள். வனத்துறை அலுவலர்களின் உதவியைக் கேட்க முடிவு செய்தேன். வனப்பாதுகாவலரிடம் சென்றபோது, அவர் எங்களுக்குத் தேவையான அனைத்து மரங்களையும் தர முன்வந்தார். பின்னால் அவர் தன் முடிவை மாற்றிக் கொண்டார். ஏனென்றால், அவரால் இலவசமாக தரக்கூடிய மரக்கன்றுகளைவிட மேலதிகமாக நாங்கள் மரக்கன்றுகளை நட ஆரம்பித்தோம். மேலதிகமான மரக்கன்றுகளுக்கு விலை கொடுத்துவிடுமாறு அவர் எங்களை கேட்டுக்கொண்டார்.

கடைசியில், வனத்துறை அலுவலர்களிடமிருந்து மரக்கன்றுகளை பெறுவதற்காக அதிகளவு நேரத்தையும் பணத்தையும் செலவழிப்பதற்கு பதிலாக, நாங்களே எங்களின் மரக்கன்று பண்ணையை உருவாக்குவது எப்படி எனக்கேட்க முடிவு செய்தோம். பெண்கள் படைப்பார்வம் உடையவர்கள். மரக்கன்றுப் பண்ணைகளை தங்களால் முடிந்தளவிற்கு சிறப்பாக அவர்கள் அமைத்தார்கள். மரக்கன்றுகள், இரண்டு மூன்று அடி வளரும்வரை அவற்றை பராமரித்து அதன்பின் தங்களது நிலத்திலே அவற்றை நட்டார்கள்.

அந்த மரங்களை, அவர்கள்தான் காப்பாற்றிப் பேண வேண்டும். மரங்கள் பிழைத்த பிறகு, பசுமைப்பட்டை இயக்கம், தான் சேகரித்த நிதியிலிருந்து சிறிது பணத்தை அவர்களுக்கு ஈடாக கொடுக்கும். இது ஒரு மாற்றத்தை அப்பெண்களிடம் கொண்டுவந்தது. ஏனென்றால் மரம் நடுதல் அவர்களுக்கு பணம் சம்பாதிக்கும் செயலாக மாறிவிட்டது. பல ஆயிரம் மரங்களை உருவாக்கியதால், பெண்கள் கையில் பணம் புழங்கியது. ஒரு மரத்திற்கு கொடுக்கப்படும் பணம் மிகக் குறைவென்றாலும், அதை பல ஆயிரத்தால் பெருக்கும்போது கிடைக்கும் தொகை பள்ளிக்கட்டணம் கட்டுவதற்கும், உடை வாங்குவதற்கும், வீட்டுச் செலவை கவனிப்பதற்கும் உதவியது. அது அற்புதமானது. மரங்களை நடுவதற்கு அதுவே மிக முக்கியமான காரணமாகவும், உற்சாகமாகவும் ஆனது. அவர்கள் தமது பண்ணையில் மரங்களை நட்டு முடித்தபின்பு நாங்கள் அவர்களிடம் சொன்னோம்: சரி இப்பொழுது உங்களுடைய அண்டை அயலாரிடம் பேசுங்கள். ஏன் அவர்களும் மரங்கள் நட வேண்டும் என்று சொல்லுங்கள். அவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளைக் கொடுங்கள். அவர்கள் அவற்றை நட்டு காப்பாற்றிய பிறகு அவர்கள் செய்த பணிக்காக, ஈட்டுத்தொகை அவர்களுக்கு கொடுக்கப்படும்.

அதிர்ஷ்டவசமாக வெப்பமண்டலத்தில் மரங்கள் மிக வேகமாக வளர்கின்றன. எனவே, மிக குறுகிய காலத்திற்குள் மரங்கள் வளர்கின்றன. உயர்ந்து விடுகின்றன. அவற்றை நடுகிறவர்களுடன் மரங்கள் பேசுகின்றன. அதனால் அவர்களுக்கு மிக ஆர்வமான அனுபவமாக இருந்தது. அவர்கள் எங்களின் தூதர்களாக ஆகிவிட்டார்கள். மரங்கள் வளரவளர, அவை நம்பிக்கையை - தன்னம்பிக்கையைத் தருகின்றன, நிலப்பரப்பையே மாற்றி விடுகின்றன. நிலப்பரப்பு மாற்றமடைந்தவுடன் பறவைகள் திரும்ப வருகின்றன. சிறு விலங்குகள் திரும்ப வருகின்றன. புழுதியின் அளவு குறையத் தொடங்குகிறது. பாதையில் நடந்து செல்லும்போது நிழல் இருக்கிறது. மேலும், திடீரென்று சமூகத்தில் ஒரு சமூகச் சூழல் உருவாகிறது. அதன் பிறகு, மரங்கள் நடச்சொல்லி மக்களை வற்புறுத்த வேண்டிய அவசியமே இல்லை. அவர்களுக்கு மரங்களின் மதிப்பு தெரிந்துவிட்டது. அவற்றை மட்டும் நாங்கள் செய்திருந்தால், அது நல்லதொரு அனுபவமாக இருந்திருக்கும். பெண்கள் மரம் நடுகிறார்கள். பார்க்கும் பலரும் பலவகைகளில் அப்படித்தான் நினைத்திருப்பர். மரங்களை நட்டதற்காக, ஏன் ஒரு பெண்ணை கைது செய்ய வேண்டும்? அவளை அடிக்க வேண்டும்? சிறையில் அடைக்க வேண்டும்? என்று மக்கள் கேட்கிறார்கள். நான் எந்த காரணத்துக்காக இந்தப் பிரச்சினையில் இறங்கினேன் என்று இப்பொழுது சொல்கிறேன். பெண்களையும் ஆண்களையும், குழந்தைகளையும் பெருமளவு திரட்ட வேண்டும் என்பதை நான் உணர்ந்து கொண்டேன். மிகப் பெருமளவில் மக்களை ஈடுபடுத்தினாலொழிய, நீங்கள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது.

எனவே, மக்களுக்கு கற்பிக்க முடிவெடுத்தோம். சமூக, சுற்றுச்சூழல் கல்வித்திட்டம் ஒன்றை அமைத்தோம். ஏன் மரங்கள் நமக்கு அவசியம் ஏன் அவை சூழலைக் காப்பாற்றவும் நமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கும் அவசியமாக இருக்கின்றன என்பதை மக்கள் உளப்பூர்வமாக உணரச் செய்ய நினைத்தோம். அப்போதுதான், நான் மனித உரிமை மீறலை சந்தித்தேன். அரசு சொன்னது, நீங்கள் கூடிப்பேசலாம், ஆனால் 9 பேருக்கு மேல் கூடினால் உங்களிடம் அனுமதிச்சீட்டு இருக்க வேண்டும். அப்போது நான் இன்னொரு மனிதரிடம் பேசி ஒரு குழிதோண்டி மரம் ஒன்றை நட அவரை வற்புறுத்துவதற்கு நான் ஏன் அனுமதி பெறவேண்டும்? அதற்கு அரசாங்கம் சொன்னது ஏனென்றால், அதுதான் சட்டம். ஒன்பது பேருக்கு மேல் கூடுவதற்கு யாருக்கும் அனுமதி இல்லை.

அதுதான் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும் அல்லது அழிப்பதற்கும் மக்களாட்சி எத்தகைய பங்கை ஆற்றுகிறது என்பதை நான் புரிந்து கொள்வதற்கான ஆரம்பம். நாங்கள் சட்டத்தை எதிர்க்க முடிவு செய்தோம். எங்களுக்கு கூடிப்பேச, ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு செல்ல, அமைப்பாக திரள சுதந்திரம் இருக்கிறது எனச்சொல்ல நாங்கள் முடிவெடுத்தோம். ஆனால், அதைப்பற்றி பேசிக் கொண்டில்லாமல் செயலில் இறங்கினோம். நாங்கள் மரக்கன்றுகள் வளர்த்த இடத்தில் கூடி, எங்களுக்கு ஒன்றுகூடவும், எங்கள் சூழலை பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் தேவையான சாத்தியங்களைப் பற்றி பேசவும் உரிமை இருக்கிறது என நாங்கள் வலியுறுத்தினோம். சமயங்களில் நாங்கள் அடிபட்டோம். எங்கள் கூட்டம் இடையில் கலைக்கப்பட்டது. அனுமதி மறுக்கப்பட்டது. பெண்களுக்கு உதவுவதற்காகவும் இந்தத் தொல்லைகளால் அவர்கள் உரிமை இழப்பதை தடுப்பதற்காகவும் அவர்களை குழுக்களாக அல்லது மன்றங்களாக பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தினோம். (அரசாங்கம், குழுக்களுக்கு கூட்டம் கூட அனுமதி அளிக்கிறது.)

ஆட்சி புரிதல் குறித்த கல்வியை தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தோம். ஏன் அரசியல்வாதிகள் நாங்கள் ஒன்று கூடி விஷயங்களை பகிர்ந்துகொள்ள அனுமதி மறுக்கிறார்கள் என்று ஆராய்ந்தபோது, அரசியல்வாதிகள்தான் சமூகத்தின் மிக மோசமான அழிவுசக்திகள் என்பது எங்களுக்கு புரிந்தது. அவர்கள் காட்டிலிருந்து திருட்டுத்தனமாக மரங்களை வெட்டுகிறார்கள், காடுகளை தனியார் மயமாக்குகிறார்கள், அரசாங்கக் கருவூலத்திலிருந்து திருடுகிறார்கள், கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் ஊழல் செய்கிறார்கள். எப்படி அவர்கள் எங்களை ஆள்கிறார்கள். நாங்கள் ஏன் இப்படி ஆளப்படுகிறோம் ஆகியவை குறித்து நாங்கள் புரிந்து கொள்ளக்கூடாது என்பதே அவர்களது நோக்கமாக இருந்தது. இதை நாங்கள் அறிந்துகொண்டோம்.

அரசு அமைப்பை பற்றி படித்தறிந்த போது நாங்கள் செய்ய வேண்டிய முக்கியமான ஒன்று, அதனமைப்பை மாற்ற வேண்டும் என்பதுதான். ஆனால் அப்போதைய அரசாங்கம் இருக்கும்வரை எம்மால் அமைப்பை மாற்றமுடியாது என உணர்ந்தோம். அந்த அரசை எப்படி மாற்றுவது என்பது குறித்து நாங்கள் வேலை செய்ய ஆரம்பித்தோம். இருக்கும் அரசை மாற்றுவதற்கு ஒருவழி தேர்தலில் பங்கேற்பது. எனவே எப்படி தேர்தலில் பங்கேற்பதென்றும், நம்பிக்கைக்குரிய மக்களிடம் அதிகாரத்தை எப்படி வழங்குவது என்பது குறித்தும் விவாதித்தோம். அத்தகைய மக்களிடம், நேர்மை கண்டிப்பாக இருக்க வேண்டும். ஏனென்றால், அதிகாரம் செய்யும் இடத்தில் இருப்பவர்களிடம் நேர்மை இல்லாவிட்டால், அவர்கள் சுற்றுச் சூழலை அழிக்கிறார்கள் என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம். மரம் நடுவது மட்டுமே எங்களது குறிக்கோள் எனத் தோற்றமளிப்பது போல இவை அனைத்தையும் நாங்கள் செய்தோம். அடிக்கடி அரசாங்கம் நாங்கள் கூடியிருக்கும் இடத்திற்கு வந்து, கூட்டம் போடுவதற்கு உங்களிடம் அனுமதி இருக்கிறது என்று தெரியும். ஆனால் நீங்கள் எதைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்கும். நாங்கள் சொல்வோம். மரங்களை எப்படி நேர்த்தியாக நடவேண்டும் என்பது பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறோம் என்று. இப்படித்தான் நாங்கள் கென்யாவின் மக்களாட்சி ஆதரவு இயக்கத்தில் பங்குதாரர்கள் ஆனோம்.

சுற்றுச்சூழலை நல்லமுறையில் பராமரிப்பது மக்களாட்சியுடன் தொடர்புடையது. மோசமான அரசு மக்களிடையே பிரிவினையை வளர்த்து அதன் மூலம் நீடிக்கிறது...

ஆப்பிரிக்காவில், ஒரு இனக்குழு சமூகத்தை மற்றொரு இனக்குழு சமூகத்திற்கு எதிராக நிறுத்துகிறது. உதாரணமாக, விவசாயக் குழுக்களுக்கும் நாடோடிக் குழுக்களுக்குமிடையே பேதங்களை வளர்ப்பது சுலபம். உலகம் முழுக்கவும் ஆப்பிரிக்காவிலும் பிற இடங்களிலும் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் பல இடங்களில் மக்கள் இயற்கை வளங்களுக்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள். வளங்களுக்காக மக்கள் சண்டை போட்டுக்கொண்டிருந்தால் வளர்ச்சி என்பதே இருக்காது.

அமைதி இல்லாத ஒரு நாட்டில் வளர்ச்சி இருக்காது. மக்களாட்சி மாண்புகளை மதிக்காத ஒரு நாட்டை நீங்கள் முன்னேற்ற முடியாது. மேலும் இயற்கை வளங்களை சரியாக கையாளாத ஒருநாட்டை - வளங்கள் சுரண்டப்படுகிற, பெரும்பான்மையை ஏமாற்றி சிறுபான்மையிடம் வளங்கள் ஒப்படைக்கப்படுகின்ற - ஒரு நாட்டை முன்னேற்றமுடியாது.

நோபல் பரிசுக்குழு, சுற்றுச்சூழல், மக்களாட்சி மற்றும் அமைதி குறித்து எங்களது எண்ணங்களை மாற்றும் ஒரு மிகப்பெரிய சவாலை எங்கள் முன் வைத்துள்ளது. இவை அனைத்தும் பின்னிப் பிணைந்துள்ளவை, ஒன்றை விட்டுவிட்டு மற்றொன்றை அணுக முடியாது என்பதை உணர ஆரம்பித்துள்ளோம்.

இந்தப் பரிசு ஒரு சவால். குறிப்பாக ஆப்பிரிக்கத் தலைமை தனது பணி குறித்து மறுபரீசிலனை செய்து கொள்ள வேண்டியதும், ஆப்பிரிக்க மக்களுக்கு சரியான தலைமையைக் கொடுப்பதன் மூலம் ஆப்பிரிக்காவுக்கு ஓர் வாய்ப்பு தரவேண்டியதும் தேவையானதாகும். நல்லாட்சியை வளர்க்கக்கூடிய, இயற்கை வளங்களை திறம்பட பயன்படுத்தக்கூடிய, மோதல்களை தவிர்க்கக்கூடிய தலைமையை ஆப்ரிக்காவில் உருவாக்க வேண்டியது நமக்கு முக்கியமானதாகும். மேலும், குழந்தைகளை அவர்களுக்குப் புரியாத போர்களில் ஈடுபடுத்தி சாக விடுவதைவிட அவர்கள் பெரியவர்களாக வளர்ந்து, குடும்பங்களைப் பேண வழிவகுக்கக் கூடிய தலைமையை நாம் உருவாக்க வேண்டும்.

எனவே, நம் தலைவர்கள் இதை ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன். கிழக்கு ஆப்பிரிக்காவிலும், மேற்கு ஆப்பிரிக்காவிலும் நடப்பவை நல்ல அறிகுறிகளைக் காட்டுகின்றன. ஆயுதங்களுக்கு பதிலாக வளர்ச்சிக்கு பணத்தை செலவழிப்பதில் தலைவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்தப் பரிசு, ஆப்பிரிக்காவிலுள்ள நமக்கு உணர்வூட்டினால், நம் தலைவர்களுக்கு உணர்வூட்டினால், பலவீனமானவற்றை பாதுகாக்கும், தங்களை நம்பும் மக்களை பாதுகாக்கும், அவர்களை மேலும் சிறப்பான எதிர்காலத்திற்கு வழிநடத்தும் தலைவர்களைக் கொண்ட புதிய யுகத்தை நம்மால் தொடங்கமுடியும். மேலும், ஆப்ரிக்காவில் நாம் இதைச் செய்தால், முழு உலகும் இந்த புதிய பிரக்ஞையுடன் யோசிக்க ஆரம்பித்தால், வளர்ச் சிக்கான புதிய தளத்தை நம்மால் அமைக்கமுடியும் என்பத உறுதியாக எனக்குத் தெரியும், நம்மால் முன்னேற முடியும்.

ஆரம்பத்தில், என்னிடம் இந்த அணுகுமுறை இல்லை. 1973க்கும் 76க்கும் இடையில் நான் தேசிய பெண்கள் ஆணையத்தில் உறுப்பினராக இருந்தேன். கென்யப்பெண்களின் பற்றுணர்வைக் கேட்டேன்: எங்களுக்கு தூய்மையான குடிநீர் வேண்டும், எங்களுக்கு விறகு வேண்டும், எங்களுக்கு உணவு வேண்டும், எங்களுக்கு கட்டுமானப் பொருட்கள், வேலிக்கான பொருட்கள் வேண்டும் எங்கள் மண்ணைப் பாதுகாக்க வேண்டும் இந்தப்பிரச்னைகளை மேலும் மேலும் கேட்க கேட்க அவற்றை நிலத்துடன் இணைத்துப் பார்க்க ஆரம்பித்தேன். பிறகு அப்பெண்களைப் பார்த்து ஏன் நாம் மரங்களை நடக்கூடாது? எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் எங்களுக்கு மரத்தை எப்படி நடுவது என்று தெரியாது என்று சொன்னார்கள். வனத்துறைஅலுவலர்களின் உதவியைக் கேட்க முடிவு செய்தேன். வனப்பாதுகாவலரிடம் சென்றபோது, அவர் எங்களுக்குத் தேவையான அனைத்து மரங்களையும் தர முன் வந்தார். பின்னால் அவர் தன் முடிவை மாற்றிக் கொண்டார். ஏனென்றால், அவரால் இலவசமாக தரக்கூடிய மரக் கன்றுகளைவிட மேலதிகமாக நாங்கள் மரக்கன்றுகளை நட ஆரம்பித்தோம். மேலதிகமான மரக்கன்றுகளுக்கு விலை கொடுத்துவிடுமாறு அவர் எங்களை கேட்டுக்கொண்டார்.

கடைசியில், வனத்துறை அலுவலர்களிடமிருந்து மரக்கன்றுகளை பெறுவதற்காக அதிகளவு நேரத்தையும் பணத்தையும் செலவழிப்பதற்கு பதிலாக, நாங்களே எங்களின் மரக்கன்று பண்ணையை உருவாக்குவது எப்படி எனக் கேட்க முடிவு செய்தோம். பெண்கள் படைப்பார்வம் உடையவர்கள். மரக்கன்றுப் பண்ணைகளை தங்களால் முடிந்தளவிற்கு சிறப்பாக அவர்கள் அமைத்தார்கள். மரக்கன்றுகள், இரண்டு மூன்று அடி வளரும்வரை அவற்றை பராமரித்து அதன்பின் தங்களது நிலத்திலே அவற்றை நட்டார்கள்.

அந்த மரங்களை, அவர்கள்தான் காப்பாற்றிப் பேண வேண்டும். மரங்கள் பிழைத்த பிறகு, பசுமைப்பட்டை இயக்கம், தான் சேகரித்த நிதியிலிருந்து சிறிது பணத்தை அவர்களுக்கு ஈடாக கொடுக்கும். இது ஒரு மாற்றத்தை அப்பெண்களிடம் கொண்டு வந்தது. ஏனென்றால் மரம் நடுதல் அவர்களுக்கு பணம் சம்பாதிக்கும் செயலாக மாறிவிட்டது. பல ஆயிரம் மரங்களை உருவாக்கியதால், பெண்கள் கையில் பணம் புழங்கியது. ஒரு மரத்திற்கு கொடுக்கப்படும் பணம் மிகக் குறை வென்றாலும், அதை பல ஆயிரத்தால் பெருக்கும்போது கிடைக்கும் தொகை பள்ளிக்கட்டணம் கட்டுவதற்கும், உடை வாங்குவதற்கும், வீட்டுச் செலவை கவனிப்பதற்கும் உதவியது. அது அற்புதமானது. மரங்களை நடுவதற்கு அதுவே மிக முக்கியமான காரணமாகவும், உற்சாகமாகவும் ஆனது. அவர்கள் தமது பண்ணையில் மரங்களை நட்டு முடித்தபின்பு நாங்கள் அவர்களிடம் சொன்னோம்: சரி இப்பொழுது உங்களுடைய அண்டை அயலாரிடம் பேசுங்கள். ஏன் அவர்களும் மரங்கள் நட வேண்டும் என்று சொல்லுங்கள். அவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளைக் கொடுங்கள். அவர்கள் அவற்றை நட்டு காப்பாற்றிய பிறகு அவர்கள் செய்த பணிக்காக, ஈட்டுத்தொகை அவர்களுக்கு கொடுக்கப்படும்.அதிர்ஷ்டவசமாக வெப்பமண்டலத்தில் மரங்கள் மிக வேகமாக வளர்கின்றன. எனவே, மிக குறுகிய காலத்திற்குள் மரங்கள் வளர்கின்றன. உயர்ந்து விடுகின்றன. அவற்றை நடுகிறவர்களுடன் மரங்கள் பேசுகின்றன. அதனால் அவர்களுக்கு மிக ஆர்வமான அனுபவமாக இருந்தது. அவர்கள் எங்களின் தூதர்களாக ஆகிவிட்டார்கள். மரங்கள் வளரவளர, அவை நம்பிக்கையை - தன்னம்பிக்கையைத் தருகின்றன, நிலப்பரப்பையே மாற்றி விடுகின்றன. நிலப்பரப்பு மாற்ற மடைந்தவுடன் பறவைகள் திரும்ப வருகின்றன. சிறு விலங்குகள் திரும்ப வருகின்றன. புழுதியின் அளவு குறையத் தொடங்குகிறது. பாதையில் நடந்து செல்லும்போது நிழல் இருக்கிறது. மேலும், திடீரென்று சமூகத்தில் ஒரு சமூகச் சூழல் உருவாகிறது. அதன் பிறகு, மரங்கள் நடச்சொல்லி மக்களை வற்புறுத்த வேண்டிய அவசியமே இல்லை. அவர்களுக்கு மரங்களின் மதிப்பு தெரிந்துவிட்டது. அவற்றை மட்டும் நாங்கள் செய்திருந்தால், அது நல்லதொரு அனுபவமாக இருந்திருக்கும். பெண்கள் மரம் நடுகிறார்கள். பார்க்கும் பலரும் பலவகைகளில் அப்படித்தான் நினைத்திருப்பர். மரங்களை நட்டதற்காக, ஏன் ஒரு பெண்ணை கைது செய்ய வேண்டும்? அவளை அடிக்க வேண்டும்? சிறையில் அடைக்க வேண்டும்? என்று மக்கள் கேட்கிறார்கள். நான் எந்த காரணத்துக்காக இந்தப் பிரச்சினையில் இறங்கினேன் என்று இப்பொழுது சொல்கிறேன். பெண்களையும் ஆண்களையும், குழந்தைகளையும் பெருமளவு திரட்ட வேண்டும் என்பதை நான் உணர்ந்து கொண்டேன். மிகப் பெருமளவில் மக்களை ஈடுபடுத்தினாலொழிய, நீங்கள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது.

எனவே, மக்களுக்கு கற்பிக்க முடிவெடுத்தோம். சமூக, சுற்றுச்சூழல் கல்வித்திட்டம் ஒன்றை அமைத்தோம். ஏன் மரங்கள் நமக்கு அவசியம் ஏன் அவை சூழலைக் காப்பாற்றவும் நமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கும் அவசியமாக இருக்கின்றன என்பதை மக்கள் உளப்பூர்வமாக உணரச் செய்ய நினைத்தோம். அப்போதுதான், நான் மனித உரிமை மீறலை சந்தித்தேன். அரசு சொன்னது, நீங்கள் கூடிப்பேசலாம், ஆனால் 9 பேருக்கு மேல் கூடினால் உங்களிடம் அனுமதிச்சீட்டு இருக்க வேண்டும். அப்போது நான் இன்னொரு மனிதரிடம் பேசி ஒரு குழிதோண்டி மரம் ஒன்றை நட அவரை வற்புறுத்துவதற்கு நான் ஏன் அனுமதி பெறவேண்டும்? அதற்கு அரசாங்கம் சொன்னது ஏனென்றால், அதுதான் சட்டம். ஒன்பது பேருக்கு மேல் கூடுவதற்கு யாருக்கும் அனுமதி இல்லை.

அதுதான் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும் அல்லது அழிப்பதற்கும் மக்களாட்சி எத்தகைய பங்கை ஆற்றுகிறது என்பதை நான் புரிந்து கொள்வதற்கான ஆரம்பம். நாங்கள் சட்டத்தை எதிர்க்க முடிவு செய்தோம். எங்களுக்கு கூடிப்பேச, ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு செல்ல, அமைப்பாக திரள சுதந்திரம் இருக்கிறது எனச்சொல்ல நாங்கள் முடிவெடுத்தோம். ஆனால், அதைப்பற்றி பேசிக் கொண்டில்லாமல் செயலில் இறங்கினோம். நாங்கள் மரக்கன்றுகள் வளர்த்த இடத்தில் கூடி, எங்களுக்கு ஒன்றுகூடவும், எங்கள் சூழலை பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் தேவையான சாத்தியங்களைப் பற்றி பேசவும் உரிமை இருக்கிறது என நாங்கள் வலியுறுத்தினோம். சமயங்களில் நாங்கள் அடிபட்டோம். எங்கள் கூட்டம் இடையில் கலைக்கப்பட்டது.அனுமதி மறுக்கப்பட்டது. களுக்கு உதவுவதற்காகவும் இந்தத் தொல்லைகளால் அவர்கள் உரிமை இழப்பதை தடுப்பதற்காகவும் அவர்களை குழுக்களாக அல்லது மன்றங்களாக பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தினோம். (அரசாங்கம், குழுக்களுக்கு கூட்டம் கூட அனுமதி அளிக்கிறது.)

ஆட்சி புரிதல் குறித்த கல்வியை தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தோம். ஏன் அரசியல்வாதிகள் நாங்கள் ஒன்று கூடி விஷயங்களை பகிர்ந்துகொள்ள அனுமதி மறுக்கிறார்கள் என்று ஆராய்ந்தபோது, அரசியல்வாதிகள்தான் சமூகத்தின் மிக மோசமான அழிவுசக்திகள் என்பது எங்களுக்கு புரிந்தது. அவர்கள் காட்டிலிருந்து திருட்டுத்தனமாக மரங்களை வெட்டுகிறார்கள், காடுகளை தனியார் மயமாக்குகிறார்கள், அரசாங்கக் கருவூலத்திலிருந்து திருடுகிறார்கள், கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் ஊழல் செய்கிறார்கள். எப்படி அவர்கள் எங்களை ஆள்கிறார்கள். நாங்கள் ஏன் இப்படி ஆளப்படுகிறோம் ஆகியவை குறித்து நாங்கள் புரிந்து கொள்ளக்கூடாது என்பதே அவர்களது நோக்கமாக இருந்தது. இதை நாங்கள் அறிந்துகொண்டோம்.

அரசு அமைப்பை பற்றி படித்தறிந்த போது நாங்கள் செய்ய வேண்டிய முக்கியமான ஒன்று, அதனமைப்பை மாற்ற வேண்டும் என்பதுதான். ஆனால் அப்போதைய அரசாங்கம் இருக்கும்வரை எம்மால் அமைப்பை மாற்றமுடியாது என உணர்ந்தோம். அந்த அரசை எப்படி மாற்றுவது என்பது குறித்து நாங்கள் வேலை செய்ய ஆரம்பித்தோம். இருக்கும் அரசை மாற்றுவதற்கு ஒருவழி தேர்தலில் பங்கேற்பது. எனவே எப்படி தேர்தலில் பங்கேற்பதென்றும், நம்பிக்கைக் குரிய மக்களிடம் அதிகாரத்தை எப்படி வழங்குவது என்பது குறித்தும் விவா தித்தோம். அத்தகைய மக்களிடம் , நேர்மை கண்டிப்பாக இருக்க வேண் டும். ஏனென்றால், அதிகாரம் செய்யும் இடத்தில் இருப்பவர்களிடம் நேர்மை இல்லாவிட்டால், அவர்கள் சுற்றுச் சூழலை அழிக்கிறார்கள் என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம். மரம் நடுவது மட்டுமே எங்களது குறிக் கோள் எனத் தோற்றமளிப்பது போல இவை அனைத்தையும் நாங்கள் செய் தோம். அடிக்கடி அரசாங்கம் நாங்கள் கூடியிருக்கும் இடத்திற்கு வந்து, கூட்டம் போடுவதற்கு உங்களிடம் அனுமதி இருக்கிறது என்று தெரியும். ஆனால் நீங்கள் எதைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்கும். நாங்கள் சொல்வோம். மரங்களை எப்படி நேர்த்தியாக நடவேண்டும் என் பது பற்றி விவாதித்துக் கொண்டிருக்கி றோம் என்று. இப்படித்தான் நாங்கள் கென்யாவின் மக்களாட்சி ஆதரவு இயக்கத்தில் பங்குதாரர்கள் ஆனோம்.

சுற்றுச்சூழலை நல்லமுறையில் பராமரிப்பது மக்களாட்சியுடன் தொடர்புடையது. மோசமான அரசு மக்களிடையே பிரிவினையை வளர்த்து அதன் மூலம் நீடிக்கிறது...

ஆப்பிரிக்காவில், ஒரு இனக்குழு சமூகத்தை மற்றொரு இனக்குழு சமூகத்திற்கு எதிராக நிறுத்துகிறது. உதாரணமாக, விவசாயக் குழுக்களுக்கும் நாடோடிக் குழுக்களுக்குமிடையே பேதங்களை வளர்ப்பது சுலபம். உலகம் முழுக்கவும் ஆப்பிரிக்காவிலும் பிற இடங்களிலும் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் பல இடங்களில் மக்கள் இயற்கை வளங்களுக்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள். வளங்களுக்காக மக்கள் சண்டை போட்டுக்கொண்டிருந்தால் வளர்ச்சி என்பதே இருக்காது.

அமைதி இல்லாத ஒரு நாட்டில் வளர்ச்சி இருக்காது. மக்களாட்சி மாண்புகளை மதிக்காத ஒரு நாட்டை நீங்கள் முன்னேற்ற முடியாது. மேலும் இயற்கை வளங்களை சரியாக கையாளாத ஒருநாட்டை - வளங்கள் சுரண்டப்படுகிற, பெரும்பான்மையை ஏமாற்றி சிறுபான்மையிடம் வளங்கள் ஒப்படைக்கப்படுகின்ற - ஒரு நாட்டை முன்னேற்ற முடியாது.

நோபல் பரிசுக்குழு, சுற்றுச்சூழல், மக்களாட்சி மற்றும் அமைதி குறித்து எங்களது எண்ணங்களை மாற்றும் ஒரு மிகப்பெரிய சவாலை எங்கள் முன்வைத்துள்ளது. இவை அனைத்தும் பின்னிப் பிணைந்துள்ளவை, ஒன்றை விட்டுவிட்டு மற்றொன்றை அணுக முடியாது என்பதை உணர ஆரம்பித்துள்ளோம்.

இந்தப் பரிசு ஒரு சவால். குறிப்பாக ஆப்பிரிக்கத் தலைமை தனது பணி குறித்து மறுபரீசிலனை செய்து கொள்ள வேண்டியதும், ஆப்பிரிக்க மக்களுக்கு சரியான தலைமையைக் கொடுப்பதன் மூலம் ஆப்பிரிக்காவுக்கு ஓர் வாய்ப்பு தரவேண்டியதும் தேவையானதாகும். நல்லாட்சியை வளர்க்கக்கூடிய, இயற்கை வளங்களை திறம்பட பயன்படுத்தக்கூடிய, மோதல்களை தவிர்க்கக்கூடிய தலைமையை ஆப்ரிக்காவில் உருவாக்க வேண்டியது நமக்கு முக்கியமானதாகும். மேலும், குழந்தைகளை அவர்களுக்குப் புரியாத போர்களில் ஈடுபடுத்தி சாகவிடுவதைவிட அவர்கள் பெரியவர்களாக வளர்ந்து, குடும்பங்களைப் பேண வழிவகுக்கக் கூடிய தலைமையை நாம் உருவாக்க வேண்டும்.

எனவே, நம் தலைவர்கள் இதை ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன். கிழக்கு ஆப்பிரிக்காவிலும், மேற்கு ஆப்பிரிக்காவிலும் நடப்பவை நல்ல அறிகுறிகளைக் காட்டுகின்றன. ஆயுதங்களுக்கு பதிலாக வளர்ச்சிக்கு பணத்தை செலவழிப்பதில் தலைவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்தப் பரிசு, ஆப்பிரிக்காவிலுள்ள நமக்கு உணர்வூட்டினால், நம் தலைவர்களுக்கு உணர்வூட்டினால், பலவீனமானவற்றை பாதுகாக்கும், தங்களை நம்பும் மக்களை பாதுகாக்கும், அவர்களை மேலும் சிறப்பான எதிர்காலத்திற்கு வழிநடத்தும் தலைவர்களைக் கொண்ட புதிய யுகத்தை நம்மால் தொடங்கமுடியும். மேலும், ஆப்ரிக்காவில் நாம் இதைச் செய்தால், முழு உலகும் இந்த புதிய பிரக்ஞையுடன் யோசிக்க ஆரம்பித்தால், வளர்ச் சிக்கான புதிய தளத்தை நம்மால் அமைக்கமுடியும் என்பத உறுதியாக எனக்குத் தெரியும், நம்மால் முன்னேற முடியும்.

நன்றி : விகடன், தமிழ் விக்கிப்பீடியா, புது விசை மற்றும்
கீற்று இணையதளம்.