Wednesday, November 9, 2011

சயாமீஸ் இரட்டையர்


ஒட்டிப் பிறக்கும் இரட்டையரைத் தான் 'சயாமீஸ் இரட்டையர்' என்கின்றனர்.

19 - ம் நூற்றாண்டில் இருந்துதான் இந்த பெயர் வந்தது.

தாய்லாந்து நாட்டின் முன்னாள் பெயர்தான் சயாம். இங்கு 1811 - ல் சாங், இங் என்ற ஆண் குழந்தைகள் ஒட்டி பிறந்தன. இதில் இருந்து ஓட்டிப் பிறக்கும் குழந்தைகளுக்கு 'சயாமீஸ் இரட்டையர்' என்ற பெயர் வந்து விட்டது.

இரட்டையர்களாக பிறப்பது ஒரு அரிய நிகழ்வுதான். 25 ஆயிரம் குழந்தைகளுக்கு ஒன்றுதான் இப்படியாக பிற
க்கின்றனர்.

தாயின் ஒரு முட்டையின் கருவில் உருவாவதால் பால், தோற்றம் என்று எல்ல விசயங்களிலும் ஒரே மாதிரியான ஒற்றுமை காணப்படுகிறது. இதனால், இவர்களின் வாழ்கையில் சில அதிசய சம்பவங்கள் நடந்து விடுகின்றன.

வட அமெரிக்காவுக்கு சென்ற சாங், இங் இருவரும் அங்கேயே இரட்டைச் சகோதரிகளைத் திருமணம் செய்து கொண்டனர். அதேபோல், இருவரும் 1874 - ல் தான் காலமானார்கள். இது போன்ற இரட்டையர்களின் வாழ்வில் ஏராளமான சம்பவங்கள் ஒற்றுமையுடன் இருப்பதை காணலாம்.




தகவல் : தினத்தந்தி

0 comments:

Post a Comment