Sunday, December 4, 2011

டின் உணவுகள் உருவான விதம் !


டின் உணவுகளின் பிறப்பிடம் இத்தாலி நாட்டின் போர்க்களம் என்றால் நம்புவீர்களா ?

1796 - ல் மாவீரன் நெப்போலியன் பிரான்ஸின் எல்லைகளை விஸ்தரிக்க, 3 லட்சத்து 50 ஆயிரம் வீரர்களை இத்தாலிக்கு அனுப்பினார். வீரர்களுக்கு எதிரிகளுடன் மட்டுமல்ல... பசி உடனும் சண்டை போட வேண்டியிருந்தது. அதனால், பிரான்ஸ் திரும்பியதும், 'பயணத்தின் போது உணவை கெட்டுப் போகாமல் வைத்திருக்கும் வழிமுறை'யைக் கண்டுபிடிப்பவர்களுக்கு பெரிய பரிசு வழங்குவதாக அறிவித்தார் நெப்போலியன்.


இந்த வெற்றிக் கோப்பையைப் பறித்தவர் நிக்கோலஸ் அப்பெர்ட் என்ற மளிகைக்கடைக்காரர். நெப்போலியனின் அறிவிப்புக்கு முன்னரே இதை பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தவர் இவர்.

காற்று படாமல் இருக்கும் உணவுகள் அதிக காலம் கெட்டுப்போகாமல் இருக்கிறது என்று கண்டுபிடித்தார். காற்று எளிதில் புக முடியாத கண்ணாடிப் பாத்திரங்களை வடிவமைத்து பரிசோதனை செய்தார்.

மாதக் கணக்கில் உணவு கெட்டுப் போகாமல் இருந்தது. ஆனால், அப்பெர்டினின் கண்ணாடி பாத்திரங்கள் கனமானதாகவும், விலை உயர்ந்ததாகவும் இருந்தது. தவறி விழுந்தாலும் உடைந்து போகும்.

ப்ரையன் டான்கின் என்ற ஆங்கிலேயரிடம் இந்த பிரச்சனையை தீர்க்கும் வழி இருந்தது. கண்ணாடிப் பாத்திரங்களுக்கு பதில் ப்ரையன் டின்னைப் பயன்படுத்த ஆரம்பித்தார். 1812 - ல் காய்கறிகள், சமைத்த உணவு வகைகளை டின்களில் அடைத்து விற்க துவங்கினார். இப்படிதான் டின் உணவு பிறந்தது.




தகவல் : முத்தாரம் இதழ்.

0 comments:

Post a Comment