Monday, April 16, 2012

தூங்க வைக்கும் தொலைபேசி !


தூங்கியே காலத்தைக் கழிக்கும் சோம்பேறிகள் ஒருபுறம் இருக்க, தூக்கமே வராமல் துன்பப்பட்டுக்கொண்டு தூக்க மாத்திரைகளை நாடும் துக்கமான நோயாளிகளும் இன்னொரு பக்கம் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட நோயாளிகள் 'இன்சோம்னியாக்கள்' (insomniacs) எனப்படுகிறார்கள்.

தூக்கம் வராமல் இந்நோயால் பரிதவிப்பவர்களுக்காவே நியூயார்க்கில் இயங்குகிறது ஸ்லீப் லைன் சேவை. அதாவது, ஒரு தொலைபேசி அழைப்பின் மூலமாகவே நம்மைத் தூங்க வைக்கும் தூக்க சேவை. "ஆம், தொலைபேசியில் இந்த ஸ்லீப் லைனைத் தொடர்பு கொண்டால் போதும்.... எப்பேர்ப்பட்ட ஆளையும் நாங்கள் பேசியே தூங்க வைத்துவிடுவோம்" என்று சவால் விடுகிறது இந்த சேவை அமைப்பு.

முதன் முதலில் இந்தப் பேச்சு - ஹிப்னாட்டிச முறையை அறிமுகப்படுத்தியவர் டான் டக்லஸ் (Don Douglas) என்ற நரம்பியல் மற்றும் மனநோய் மருத்துவர்தான். தூக்கத்தைத் தூண்டும் விதமாக இவர் பேசிய 8 நிமிட உரையைத்தான் இந்த ஸ்லீப் லைன் சேவையிலும் ஓட விடுகிறார்கள். அந்தக் குரல் செய்யும் மாயாஜாலமோ, அல்லது பேசும் விஷயம் அவ்வளவு மொக்கையோ தெரியவில்லை..... இந்த சேவையைத் தொடர்பு கொள்பவர்களில் பெரும்பாலனவர்கள் நல்ல தூக்கத்தைப் பெற்று விடுகிறார்களாம்.



முதலில் தூங்க வசதியான, பிடித்த இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறது. இவை சிகிச்சையின் முதல் படிகள். சிகிச்சையின் போது தொலைபேசிக் குரலின் ஒலி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே வரும். கடைசியாக அந்தக் குரல் பேசி முடிப்பதற்குள் மறுமுனை 'கொர்ர்....கொர்ர்'தான்!

"ஏராளமான பக்க விளைவுகள் கொண்ட தூக்க மாத்திரைகளைப் பயன்படுத்துவது இதனால் வெகுவாகக் குறைந்த்திருக்கிறது" என்கிறது இந்தச் சேவையை நடத்திவரும் "லென்னாக்ஸ் ஹில்' மருத்துவமனை.

ஸ்லீப் லைன் பெற்று வரும் வெற்றியின் விளைவாக, விரைவில் நீரிழிவு நோய்க்கு ஒரு ஹெல்ப் லைன், காச நோய்க்கு ஒரு ஹெல்ப் லைன் என்று இவர்கள் கொண்டு வரவிருக்கிறார்கலாம். இந்த இரண்டு நோய்களுக்கும் பேச்சால் தீர்வு தர முடியாது என்றாலும், சிகிச்சை தொடர்பான பயனுள்ள ஆலோசனைகளை தொலைபேசியில் வழங்குவார்கள்.






தகவல்: ஆர்.ஆர்.பூபதி.

0 comments:

Post a Comment