Thursday, April 26, 2012

நிலம்....நடுக்கம்.


அருகருகே நகரும் இரண்டு பூமித் தட்டுகள் லேசாக உராயும்போது பெரிய அளவில் அழிவு இல்லை. அது லேசான நடுக்கமே. ஆனால், எதிரெதிர் திசையில் நகரும் இரண்டு பூமித் தட்டுகள் முட்டிக் கொள்ளும்போதுதான் பிரளயமே நடுங்குகிறது.

பொதுவாகவே பூமித் தட்டுகள் நகர்வது ரொம்ப குறைவான வேகத்தில்தான். ஆண்டுக்கு சில சென்டி மீட்டர்கள். ஆனால் முட்டிக்கொள்ளும்போது நீயா - நானா என்கிற அளவிற்கு கங்கணம் கட்டிக் கொள்கின்றன. இரண்டும் தட்டுகளும் ஆண்டுக்கணக்காக அப்படியே முட்டிக் கொண்டு நிற்கும். தட்டின் பின் பக்க சுமை இதை அழுத்தி முன்னால் தள்ளப் பார்க்கும். இப்படி ஒருபுறம் நகரமுடியாமல் தவிக்கும் இந்தத் தட்டுகளில் அழுத்தம் அதிகமாகிக் கொண்டே இருக்கும்.

ஸ்பிரிங் விளையாட்டு போலத்தான் இது. இருபுறமும் கைகளால் ஒரு ஸ்பிரிங்கை அழுத்திப் பிடித்திருக்கிறீர்கள். அதை அழுத்தி வைக்கும்போது எப்படியாவது இயல்பு நிலைக்கு திரும்ப முயற்சிக்கும். இரண்டு புறமும் பிடித்திருக்கும் கைகளை விட்டுவிடுகிறீர்கள். சட்டென அது விரிந்துவிடும் இல்லையா ? அதுபோல இரண்டு தட்டுகள் ஆண்டுக்கணக்கில் முட்டிக் கொண்டிருக்கும்போது சேரும் அழுத்தம் திடீரென சில நொடிகளில் வெளிப்படும். அந்த சக்தியின் வெளிப்பாடு மிகப் பயங்கரம்.



அப்போது அந்தத் தட்டுகள் நகர்ந்து, இத்தனை ஆண்டுகளாக பாக்கி வைத்திருந்த தூரத்தை ஒரே சமயத்தில் கடக்கப் பார்க்கும். இதில் ஒரு தட்டு பெரியதாகவும் இன்னொன்று சிறியதாகவும் இருந்தால் ஒரு தட்டு இன்னொரு தட்டிற்கு அடியில் கொஞ்ச தூரம் போய்விடும். அதன் பின் சில காலம் ஆட்டம் கண்டு கொண்டே இருக்கும். நிலை பெறுவதற்கு 6 மாதங்கள் கூட ஆகலாம்.





நன்றி : முத்தாரம் இதழ்.

0 comments:

Post a Comment