Monday, February 6, 2012

தகவல் களம் !


தீயதைப் பார்க்காதே, கேட்காதே, பேசாதே என உணர்த்தும் மூன்று குரங்கு பொம்மைகள் புகழ் பெற்றவை. அவை ஜப்பான் நாட்டில் நிக்கோ எனும் நகரத்திலுள்ள புத்த ஆலய ஓவியங்கள். அதைதான் பொம்மைகளாக்கி விற்பனை செய்கிறார்கள். அந்த புகழ் பெற்ற ஓவியத்தை வரைந்தவர் ஹிதாரி ஜிஸ்கோ என்ற புகழ் பெற்ற ஓவியர். அந்த குரங்குகளுக்கு மிஜாரு, இவஜாரு, கிகஜாரு (Mizaru, Iwazaru, Kikazaru) என்ற ஜப்பானியப் பெயர்கள் உண்டு.



பிரான்ஸ் நாட்டு உணவகங்களில் சாப்பிடப் போகும் குடும்பத்தில் குழந்தைகள் சமர்த்தாக இருந்தால், அவர்களுக்கு உணவாக ஊழியர்களே கொசுறு (Tips) கொடுப்பார்கள். உண்மைதான். மேசை விரிப்பில் உணவுப் பொருள் எதையும் சிந்தாமல் சாப்பிடும் குழந்தைகளுக்கு, அந்த ஒழுக்கத்தைப் பாராட்டும் வகையில் கொடுக்கப்படுவதுதான் அது. இதைப் பார்த்துப் பெரியவர்களும் எச்சரிக்கையுடன் உணவுப் பொருட்களைச் சிந்தாமல், சிதறாமல் உண்ண வைக்கிறார்கள்.


ஆராய்ச்சியாளர்கள் தங்கள் வாழ்க்கையையே ஆராய்ச்சிகாகக் கழிக்கிறார்கள். இது ஒருபுறம் இருக்க, அவ்வாறு சிரமப்பட்டு கண்டுபிடித்தப் பொருளுக்கு உரிமம் வாங்குவது அதைவிடச் சிரமம். தான் கண்டுபிடித்தப் பொருளுக்கு உரிமம் பெறுவதற்குள் அதே பொருளுக்கு வேறொருவர் பெற்றுவிட்டால்....

எலிசா கிரே என்பவர்க்கு இப்படிதான் நேர்ந்தது. பல ஆண்டுகள் கடினமாக உழைத்த கண்டுபிடிப்புக்கு உரிமம் பெறுவதற்காக 1876 பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி விண்ணப்பித்தார். ஆனால், அவருக்கு 2 மணி நேரத்திற்கு முன் இன்னொருவர் அதே பொருளுக்கு உரிமம் பெற்றுவிட்டார். அந்த நபர் வேறு யாரும் அல்ல. அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்தான் அவர். தொலைபேசிதான் அந்தக் கண்டுபிடிப்பு!



ஜப்பானியர்கள் கடைபிடிக்கும் பல நல்ல பழக்கங்களில் இதுவும் ஒன்று. தாம் சாப்பிட ஆரம்பிக்கும் முன் ''கோச்சிசொசம' (Gochisosama) என்று சொல்வார்கள். இது வீட்டில் மட்டுமல்ல, வெளியே உணவகங்களில், நண்பர் - உறவினர் வீடுகளில், பிற நாடுகளில் என்று எல்லா இடங்களிலும் அவர்கள் மேற்கொள்ளும் பழக்கம். இதற்கு 'இந்த உணவைத் தயாரித்து வழங்கியவருக்கு நன்றி' என்று பொருள்.





தகவல் : வித்யுத், கே.ஜெயலட்சுமி.

0 comments:

Post a Comment