Thursday, February 9, 2012

தகவல் துளி !


தென் ஆப்பிரிக்காவில் கிம்பர்லி என்ற இடத்தில் 1871 - ல் மலையைக் குடைந்து வைரச் சுரங்கம் உருவாக்கினர்.சுரங்கத்தில் 2722 கிலோ வைரக் கற்கள் கிடைத்தன. ஆனால், மலை திடீரென்று இடிந்ததில் சுரங்கம் பள்ளமாக மாறியது. தற்போது 240 மீட்டர் ஆழம் 463 மீட்டர் சுற்றளவுடன் உள்ள மிகப் பெரிய பள்ளமாகக் காட்சியளிக்கிறது இச்சுரங்கம். உலகின் இரண்டாவது மிகப் பெரிய பள்ளம் இது.



கேரளாவின் பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இடுக்கி அணை ஆசியாவிலேயே உயரமான வளைவு அணைகளுள் ஒன்று. இது 1973 - ல் திறக்கப்பட்டது.



இதயத்தின் கீழ்ப்பாக நுனிக்கு, 'அபெக்ஸ்' என்று பெயர். இது மார்புக் கூட்டை லேசாகத் தொட்டு கொண்டிருப்பதால் தான் இதயம் தன் வேலையை சரிவரச் செய்ய முடிகிறது.


தகவல் : டி.கார்த்திக், கோவிந்த் மற்றும் கே.ஜெயலட்சுமி.

0 comments:

Post a Comment