Monday, September 5, 2011

அதென்ன பனானா ?


வாழைப்பழம் முதலில் தோன்றியது ஆசியாவில்தான். கி.மு.327ல் அலெக்ஸாண்டர் இந்தியாவுக்கு படையெடுத்து வந்தபோது வாழைப்பழத்தை விரும்பி சாப்பிட்டிருக்கிறார்.

திரும்பி போகும்போது கிரேக்க நாட்டிலும் மேற்கு ஆசியா மற்றும் மேலை நாடுகளிலும் வாழைப்பழத்தை அறிமுகப்படுத்திவிட்டு அவர் சென்றதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அரேபியாவில் வாழைப்பழம் விற்பனைக்கு வந்தபோது பெரிய அளவில் விரல் போன்று வாழைப்பழம் இருந்ததால், அதை 'விரல்' என்றே அழைத்தார்கள். விரல் என்றால் அரபி மொழியில் 'பனானா' என்று அர்த்தம்.

நாளடைவில் ஆங்கிலத்திலும் இந்தப் பெயர் பயன்படுத்தப்பட்டு, இன்று உலகெங்கும் 'பனானா' என்றே அழைக்கப்படுகிறது.


தகவல் : முத்தாரம்.

0 comments:

Post a Comment