Monday, March 12, 2012

காடும்....கானுயிர்களும்


லத்தீன் அமெரிக்க நாடான கோஸ்டாரிக்காவில் வித்தியாசமான வண்ணத்துப் பூச்சிகள் காணப்படுகின்றன. இவை பல வண்ணங்களில் இருப்பது வித்தியாசமானத்தல்ல; இவை எண்களுடன் தொடர்பு கொண்டிருப்பதுதான் வித்தியாசம். ஆமாம்....இவற்றின் ஒவ்வொரு பக்கத்திலுமுள்ள இரண்டாவது இறக்கையின் அடிப்பாகத்தில் 89 என்ற இலக்கம் கொண்ட எண் தெரிவது போல உள்ளது. அதனாலேயே இவை 'எண் வண்ணத்துப் பூச்சிகள்' (Number Butterflies) என அழைக்கப்படுகின்றன. 89-க்குள் வாழ்க்கை இருக்குது இராமைய்யா....



மா, கரி, சிந்தூரம், அத்தி, அறுகு, இம்மடி, கைம்மா இதெல்லாம் யானைக்கான வெவ்வேறு தமிழ்ப் பெயர்கள். களிறு என்றால் ஆண் யானை. பிடி என்றால் பெண் யானை. பெயரைச் சொன்னாலே அதிருமில்லே....



எறும்பு தின்னிகளின் உடல் முழுவதும் முள் போன்ற அடுக்கடுக்கான பட்டை அமைப்பு இருக்கும். இந்தப் பட்டைகளைத் துப்பாக்கிக் குண்டுகளாலும் துளைக்க முடியாது. அத்தனை வலுவானவை. அஞ்சா நெஞ்சன்.



ஒரு மரம் என்றால் அதற்கு இலை இருக்கும். ஒரு காலகட்டத்தில் அந்த இலை உதிரும் ; பிறகு மரம் துளிர்க்கும். இலைகள் வளரும். ஆனால், சந்தன மரத்தில் மட்டும் இலைகள் உதிராது. ஒரு சந்தன மரம் முழு வளர்ச்சியடைய 60 முதல் 100 ஆண்டுகள் ஆகும். இதனால்தான் சந்தனத்திற்கு இத்தனை மதிப்பு.
வயசானாலும் வாசம் போகாது.







தகவல் : வித்யுத்.

3 comments:

rajamelaiyur said...

நல்ல புதிய தகவல்கள் நன்றி

Dr.Dolittle said...

nice and informative

Siraju said...

நன்றி நண்பர்களே !

Post a Comment