Tuesday, March 13, 2012

படம் சொல்லும் சேதி !


தைவானில் நடைபெற்ற '3-டி' கலைக் கண்காட்சியில் ஒரு முப்பரிமாண ஓவியத்தின் வாய்க்குள் நுழைந்து வெளிவரும் ஒரு பெண்.



இதைக் காதல் என்றும் சொல்லலாம். உக்ரைன் நாட்டின் சோபிக் நகரில் க்ளேவென் என்ற இடத்தில் இருக்கும் பயன்படுத்தப்படாத பழைய ரயில் பாதையைச் சுற்றி மரங்கள் இப்படி அடைந்து வளர்ந்து, அந்தப் பாதையை குகையாக்கி இருக்கிறது. நெருங்கியவர்களின் கை பிடித்து இந்தப் பாதையில் நடந்தால் நேசம் கிளர்ந்தெழக்கூடும்!




அந்தக்கால ஜமீன் பங்களாக்களில் புலித்தலை, மான் தலை என்று சுவரில் பாடம் செய்து மாட்டியிருப்பதைப் பார்த்திருக்கலாம். இறந்த விலங்கை இப்படி தோலோடு படம் செய்துவைப்பது, 'டாக்ஸிடெர்மி' (Taxidermy) எனப்படுகிறது. இப்படிப் பாடம் செய்த விலங்குகளை ஏதோ சுவரில் பொம்மை போல மாட்டி வைக்காமல், அவற்றை அலங்கரித்து, மனிதர்கள் செய்வது போன்ற செயல்களை அவையும் செய்வதாக நடிக்க வைத்துக் காட்டுவது இப்போது அமெரிக்காவில் பிரபலமாகி வருகிறது. நிறைய பானம் கட்டி இதைக் கற்று கொள்கிறார்கள்.







தகவல் : முத்தாரம் இதழ்.

2 comments:

Dee........ said...

arumayana pathivu :)
arputhamana vela seiringa...
Vazthukkal thamizhare:)
Dee..

Siraju said...

நன்றி கார்த்திக்.

Post a Comment