Friday, March 23, 2012

பேச்சை நிறுத்தும் துப்பாக்கி !


'சும்மா வளவளன்னு பேசி நம்ம வேலையைக் கெடுக்கறவங்களை நிக்க வச்சு சுடணும்' என்று புலம்புகிறீர்களா ? இனிமேல் நிஜமாகவே அப்படிப்பட்டவர்களை சுடலாம்... இந்த சிறப்பு துப்பாக்கியை வைத்து !

ஆம், 'ஸ்பீச் ஜாமிங் கன்' (Speech jamming gun) என்ற இந்தத் துப்பாக்கி, மனிதர்களுக்கு எந்தக் காயமும் ஏற்படாமல் அவர்களின் நான்-ஸ்டாப் பேச்சை மட்டும் கப்சிப் என்று நிறுத்திவிடுகிறதாம். ஜப்பானைச் சேர்ந்த கஸூடகா குரிஹரா, கோஜி சுகடா என்னும் இரண்டு விஞ்ஞானிகள் இணைந்து வடிவமைத்திருக்கும் கண்டுபிடிப்பு இது.

'இனிமேல், பள்ளி வகுப்பறையில் மாணவர்களில் யாராவது வண்டி வண்டியாய்ப் பேசிக் கொண்டிருந்தாலோ, நூலகத்திற்குள் உட்கார்ந்து கதையடித்துக் கொண்டிருந்தாலோ இந்தத் துப்பாக்கித்தான் பேசும்' என்று பன்ச் அடிக்கிறார்கள் அந்தக் கண்டுபிடிப்பாளர்கள்.

சரி, இது எப்படி பேச்சை நிறுத்துகிறது ? ரொம்ப எளிது. தூரத்தில் நிற்கிறவர்களாக இருந்தாலும், அவர்களின் பேச்சை சரியாகப் பிடித்துக் கொள்ளும் ஒரு விசேஷ மைக் இதில் இருக்கிறது. அது பேசிக் கொண்டிருப்பவரின் வார்த்தைகளை அச்சு பிசகாமல் இழுத்துப் பதிவு செய்து கொள்கிறது. அப்படிப் பதிவு செய்த வார்த்தைகள், ஒரு விசேஷ ஸ்பீக்கர் வழியாக ராக்கெட் வேகத்தில் மேற்படி ஆசாமி மேல் திருப்பி ஏவப்படுகிறது. இத்தனையும் 0.2 நொடிக்குள் துரிதமாக நடந்து விடுவதால், பேசுகிறவர் தான் பேசிய வார்த்தைகளையே 0.2 நொடிக்குள் திரும்பக் கேட்கிறார்.


அப்படி நாம் பேசிய வார்த்தைகளே நமக்குக் கேட்டால் நம் பேச்சு சட்டென நின்று விடுவது உளவியல் ரீதியான உண்மை. இதைப் பயன்படுத்திதான் அமைதியை நிலைநாட்டுகிறது இந்த கப்சிப் துப்பாக்கி !

"நூறு அடி தூரத்தில் இருப்பவர்களிடம் கூட இந்தத் துப்பாக்கி செயல்படக் கூடியது. மேலும், சம்பந்தப்பட்டவர் மீது இது ஒலியை செலுத்தும்போது பக்கத்தில் நிற்பவர் கூட அந்த ஒலியை அறியமாட்டார். எனவே, யாருக்கும் எந்த பாதிப்பும் இதனால் இல்லை' என்கிற விஞ்ஞானிகள், இதன் குறைபாடாக ஒன்றே ஒன்றைத்தான் குறிப்பிடுகிறார்கள். அர்த்தமுள்ள வார்த்தைகளைப் பேசினால் மட்டும்தான் இந்தக் கருவி அதைத் திருப்பிச் செலுத்துமாம். அர்த்தமின்றி ஏதேனும் உளறினால் வேலை செய்யாதாம்.






தகவல் : கோகுலவாச நவநீதன்.

2 comments:

Tamilan said...

haha arumayana kandupudippu !
Parliament la aporam sattasabai la use panalam sir...
INDIA vuku nu kandupuchurukaanga !!

Siraju said...

தோழர் தமிழன். நல்ல யோசனை. கருத்துக்கு நன்றி.

Post a Comment