Sunday, March 18, 2012

ஆச்சரியங்கள் - விநோதங்கள் !


உடலில் எந்த பாகத்தில் வலி ஏற்பட்டாலும் அதை பாரம்பரிய சிகிச்சை மூலம் குணமாக்க முடியும் என்கிறார்கள் ஈரான் நாட்டின் வைத்தியர்கள். 'ஹிஜாமா' எனப்படும் இந்த 'கப்பிங் தெரபி' (Cupping Therapy) சிகிச்சையை பலர் எடுத்துக் கொள்கிறார்கள்.


கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் கப்புக்குள் பேப்பரைப் போட்டு எரித்து, அதன் உட்புறத்தை வெற்றிடமாக்கி, வலியுள்ள இடத்தின் மேல் வைத்து விடுகிறார்கள். கப்பில் உள்ள வெப்பம், அந்த பகுதி தசைகளை அழுத்திப் பிடித்துக் கொள்கிறது. வெப்பம் மெல்ல உடலில் ஊடுருவிச் செல்வதால், அந்த இடம் சிவப்பாகி ரத்தக் கசிவு ஏற்படுகிறது. வழியை ஏற்படுத்தும் கெட்ட இரத்தம் இப்படி வந்துவிட்டால் வலி சரியாகிவிடுமாம். 3500 ஆண்டு பழமையான இந்த சிகிச்சையை ஈரான் மட்டுமில்லாமல், சீனா மற்றும் அரேபியா நாடுகளிலும் பின்பற்றி வருகிறார்கள்.


'உலகின் மிக உயரமான தகவல் தொடர்பு டவர்' என்ற கின்னஸ் சாதனையைப் படைத்திருக்கிறது, ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலுள்ள 'டோக்கியோ ஸ்கை ட்ரீ' (Tokyo Sky Tree). உலகின் மிக உயர்ந்த கட்டிடம் என்ற வகையிலும் இது இரண்டாம் இடத்தைப் பெறுகிறது. (முதலிடம், புர்ஜ் கலிபா, துபாய்).

634 மீட்டர் உயரம் கொண்ட இதன் கட்டுமானப் பணிகள் இந்த பிப்ரவரி 29-ம் தேதி முடிவடைந்தன. ஆனால், அதற்கு முன்பே கின்னஸ் சான்றிதழ் தேடி வந்துவிட்டது. கடந்த வருட இறுதியிலேயே முடிந்திருக்க வேண்டியது. ' 2 மாத தாமதத்துக்குக் காரணம், கடந்த வருடம் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியும், நிலநடுக்கமும்தான்' என்கிறது கட்டுமான குழு.



லீப் வருடத்தில் வரும் பிப்ரவரி 29 என்ற கூடுதல் தினத்தை ஒவ்வொரு நாட்டிலும் வித விதமாக கொண்டாடுகிறார்கள். அமெரிக்காவில் பூனைக்கான உணவுகள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று, அந்த உணவு டப்பாக்களை வைத்தே 10 அடி உயர பூனை ஒன்றை அன்றே உருவாக்கியது. ஆயிரக்கணக்கான இந்த உணவு டப்பாக்களை ஆதரவற்ற பூனைகளை வளர்க்கும் இல்லங்களுக்குக் கொடுத்து விட்டார்கள்.





தகவல் : ப்ரியா.

0 comments:

Post a Comment