Thursday, March 22, 2012

அமைதி, அன்பு, காரம்...


இதற்கு பெயர் என்னவோ 'அமைதி படகு' என்பதுதான்! ஆனால் இது குட்டியூண்டு படகு இல்லை. ஆயிரம் பேர் பயணம் செய்யும் வசதிக் கொண்ட சொகுசுக் கப்பல். ஒரு லட்சியப் பயனத்துக்காக இப்போது இந்தக் கப்பல் உலகம் சுற்றி வருகிறது. 'அழிவை ஏற்படுத்தும் அணு ஆயுதங்களை உலகில் எந்த நாடும் தயாரிக்கவோ, வைத்திருக்கவோ கூடாது' என்பதுதான் அந்த உன்னத லட்சியம். ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்களில் அமெரிக்கா அணு குண்டுகளை வீசியபோது தப்பிப் பிழைத்த 130 பேர் இந்தப் பிரச்சாரக் குழுவில் இடம் பெற்றிருக்கிறார்கள். காயம்பட்டவர்கள்தானே வலியை விவரிக்க முடியும் !


திமிங்கல குடும்பத்தைச் சேர்ந்தவை டால்பின் மீன்கள். இவற்றின் முதல் எதிரி சுறா மீன்தான். ஒரு டால்பின், குட்டி போடும்போது மற்ற டால்பின்கள் அதைச் சுற்றி சுவர் போல நின்று, தாயையும் குட்டியையும் சுறாக்களிடமிருந்து காப்பாற்றுகின்றன. இது மட்டுமில்லை... ஒரு டால்பினுக்கு உடல் நலம் சரியாக இல்லா விட்டால், பிற டால்பின்கள் அதனிடம் வருகின்றன. அதை அப்படியே கடல் மட்டத்துக்கு மேலே தூக்கி வந்து, அது எளிதாக சுவாசிப்பதற்கு உதவுகின்றன.




தென் அமெரிக்க நாடான சிலியிலிருந்து இங்கு வந்தது மிளகாய். சிலி நாட்டிலிருந்து வந்ததால்தான் ஆங்கிலத்தில் 'சில்லி' என்று அழைக்கப்படுகிறது.



தகவல்: வித்யுத், முக்கிமலை நஞ்சன், லோகேஷ்.

0 comments:

Post a Comment