Tuesday, March 27, 2012

படம் சொல்லும் சேதி !


கென்யாவின் மாஸாய் பழங்குடி இனத்தவர் மத்தியில் குழந்தைத் திருமணமும், பெண்களை சித்ரவதை செய்யும் பழக்கம் அதிகம் இருக்கிறது. மாஸாய் இளைஞர்களுக்கு கிரிக்கெட் கற்றுக் கொடுத்து அவர்களை நவீனப்படுத்தித் திருத்த அரசு முயற்சி செய்கிறது. அப்படி கிரிக்கெட் ஆடும் ஒரு மாஸாய் இளைஞர்.


புகழ்பெற்ற நார்வே சிற்பி குஸ்தாவ் விஜிலேண்ட் 212 கல் மற்றும் உலோகங்களை வைத்து, தலைநகர் ஆஸ்லோவில் சிற்பப் பூங்காவை உருவாக்கி வருகிறது அந்நாட்டு அரசு. 1939-ம் ஆண்டு தொடங்கி 1949-வரை அவர் செதுக்கிய சிற்பங்களை அழகிய பீடங்களில் வைத்து பூங்கா உருவாகிறது.


மனிதர்களைப் போலவே ஆணாதிக்கம் மிகுந்த சமூகத்தில் வாழ்கின்றன கடல் ஆண் சிங்கங்கள். தங்களுக்கென கடலிலும், கரையிலும் எல்லை நிர்ணயித்துக் கொள்ளும் கடல் ஆண் சிங்கங்கள், அந்த எல்லைக்குள் பெண் கடல் சிங்கங்களை அனுமதிக்கும். தனது வாரிசே ஆனாலும் அனுமதி இல்லை ! மீறி வரும் பிள்ளையைக் கொல்லக் கூடத் தயங்குவதில்லை இவை! அழிந்து வரும் அரிதான இந்த ஆஸ்திரேலிய கடல் சிங்கங்களை 'நேஷனல் ஜியோகிராபிக்' இதழுக்காக படம் எடுத்தவர், மைக்கேல் பேட்ரிக் ஒ' நீல்.






தகவல் : முத்தாரம் இதழ்.

0 comments:

Post a Comment