Thursday, March 1, 2012

கரடி பொம்மை (Teddy bear) உருவான விதம்...


மெத்து மெத்தென இருக்கும் இந்த கரடி பொம்மையை யாருக்குதான் பிடிக்காது. 1902-ல் அமெரிக்க அதிபராக இருந்த தியோடர் ரூஸ்வெல்ட் (Theodore Roosevelt) மிஸிஸிபி மாகாணத்துக்கு வேட்டையாடச் சென்றார். பாதுகாப்பு கருதி ஒரு கரடியை கட்டி வைத்து சுடச் சொன்னார்கள் அவரது உதவியாளர்கள். அது 'முறைகேடான விஷயம்' என்று மறுத்துவிட்டார் ரூஸ்வெல்ட்.

தியோடர் ரூஸ்வெல்ட்

மறுநாளே இந்த விஷயத்தை கார்ட்டூனாக பல பத்திரிகைகள் வெளியிட்டன. (பேரிமேர் கார்ட்டூன் மிகவும் பிரபலமானது).


பத்திரிகைகளின் கேலிச் சித்திரம்

'ப்ரூக்ளின்' என்ற பெயரில் கடை வைத்திருந்த மோரிஸ் மிச்சோடம் மற்றும் அவரது மனைவி ரோஸ் ஆகியோர் பஞ்சு அடைத்த பர் (Fur-பஞ்சைப் போல மெத்தென இருக்கும் ஒருவகையான துணி) கரடி பொம்மைகளை விற்பனைக்கு வைத்திருந்தனர். அவற்றுக்கு டெடிஸ் பியர் (Teddy's bear) என அதிபர் ரூஸ்வெல்டிடம் அனுமதி பெற்று பெயர் வைத்தனர். (டெடி என்பது அதிபரின் செல்லப் பெயர்) கன ஜோரான விற்பனை !

இதே காலகட்டத்தில் ஜெர்மனியில் ஒரு சம்பவம், 1880-ல் ஃபர் பொம்மைகளை அறிமுகப்படுத்திய மார்கரெட் ஸ்டீப், முதலில் ஃபர் யானைகளையே விற்றுக் கொண்டிருந்தார். அவரது உறவினரான ரிச்சர்ட், ஃபர் கரடி பொம்மைகளை விற்குமாறு தூண்ட, 1902-ல் அவற்றைத் தயாரித்து விற்க ஆரம்பித்தார் மார்கரெட். ஜெர்மனியில் அவை சரியாக விற்பனையாகவில்லை. ஆனால், ஒரு பொம்மைத் திருவிழாவில் அமெரிக்க வியாபாரி ஒருவர், மார்கரெட்டிடம் இருந்து 3 ஆயிரம் டெடி பியர்களை வாங்கிக் கொண்டார்.


ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட முதல் கரடி பொம்மை


மோரிஸ் மிச்டோமின் கரடி பொம்மைகள் குழந்தைகள் போல காணப்பட்டன. ஸ்டீப்னின் கரடி பொம்மைகள்தான் கரடிகளைப் போலவே இருந்தன. ஸ்டீஃப்னின் நிறுவனம் இன்றளவும் உலக அளவில் டெடி பியர்களை ஏற்றுமதி செய்து வருகிறது. பொம்மையை மட்டுமல்ல, டெடி பியர் அனிமேஷன், வீடியோ கேம் என பணம் கொழிக்கின்றன.




தகவல் : முத்தாரம் இதழ்.
பட உதவி : விக்கிப்பீடியா.

0 comments:

Post a Comment