Tuesday, October 11, 2011

மரங்களை வளர்க்கும் சட்டம்

மரங்கள் இயற்கையின் கொடை. நாம் இந்த பூமியில் வாழ வழி செய்பவை. ஆனால் மனிதர்கள் யாரும் மரங்களை போற்றுவதில்லை. தனது சுயநலத்திற்காக மனிதன் மரங்களை தொடர்ந்து அழித்துக் கொண்டே இருக்கிறான். இதற்க்கு எந்த நாடும் விதி விலக்கல்ல. எல்லா நாட்டிலும் மனிதர்கள் தன் பங்கிற்கு மரங்களை அழித்துக் கொண்டு தான் இருக்கின்றனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் 50 வருடங்களுக்கு முன்பே மரம் வெட்டுதல் மிகப் பெரிய தொழிலாக விஸ்வரூபம் எடுத்திருந்தது. காடுகள் கண் மண் தெரியாமல் அழிக்கப்பட்டன. பெரும்பாலான காடுகள் இருந்த சுவடே தெரியாமல் தரைமட்டமாயின. மரங்கள் இல்லாததால் சுற்றுச் சூழலில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. பிலிப்பைன்ஸ் அரசாங்கம் தாமதமாக கண் விழித்துக் கொண்டது.

பெரிய அளவில் மரங்களை வளர்த்து நாட்டின் சுற்றுச் சூழலை இயல்பு நிலைக்கு கொண்டு வரவில்லையென்றால் பெரும் பஞ்சம் ஏற்படும் என நினைத்தது. சூழலை கட்டுபடுத்தவும், நாட்டின் அழகை மேலும் மேம்படுத்தவும் 1977 -ம் ஆண்டில் ஒரு சட்டத்தை அவசர அவசரமாக கொண்டு வந்தது.

அதன்படி 10 வயதிற்கு மேற்பட்ட ஆரோக்கியமான உடல் நலம் கொண்ட ஒவ்வோர் ஆணும், பெண்ணும் ஒவ்வொரு மாதமும் ஒரு மரம் நட்டு அது அழிந்து விடாமல் பாதுகாத்து வளர்க்க வேண்டும் என்று கூறியது. இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு அரசால் வழங்கப்படும் எல்லா சலுகைகளும், உரிமைகளும் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதுபோக 175 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது. மக்கள் விரும்பும் மரங்களின் நாற்றுகளை அரசு இலவசமாக வழங்கியது. இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு அரசின் குறியீட்டை விட அதிகமாக மரம் வளர்த்தவர்களுக்கு அரசாங்கம் ஒரு சான்றிதழும் அரசு வேலைகளில் முன்னுரிமையும் கொடுத்தது.


இந்த திட்டதின்ப்படி ஐந்து ஆண்டு முடிவதற்குள் 36 கோடி புதிய மரங்கள் நாட்டில் முளைத்தன. இன்றைக்கு இயக்கி வளம் நிரம்பிய ஒரு தேசமாக பிலிப்பைன்ஸ் பசுமையோடு திகழ்கிறது.

நாமும் எத்தனை நாளைக்குதான் வெறும் விழிப்புணர்வை மட்டும் கொடுத்துக்கொண்டே இருப்பது. அரசு சட்டம் கொண்டு வந்து கடுமையாக அதனை அமல்படுத்தினால் இந்தியாவும் ஒரு பசுமை பூமிதான் என்பதில் சந்தேகம் இல்லை.


தகவல் : தினத்தந்தி

1 comments:

Siraju said...

நன்றி கண்ணன்.

Post a Comment