Monday, October 24, 2011

கடல் கடந்து கவிதை படித்தவர்


ராபர்ட் ஓபன் ஹய்மர் என்ற அறிவியல் அறிஞர் இருந்தார். இவர் அணுக்கருப் பிளவு, அணு உலை சார்ந்த அறிவியலில் சிறந்து விளங்கினார்.

தனது 21 - ம் வயதில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்குச் சென்று படித்தார். படிப்பதில் ஆர்வம் அதிகம் உடையவர். அதனால், நூலகத்திற்கு சென்று பல நூல்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும், தேடி தேடிப் படிப்பார்.

இதனால், பல நேரங்களில் அவரது தந்தை தன் மகனைக் காணவில்லையே, எங்கு சென்றிருப்பான் என்று நூலகத்திற்கு வந்து தேடி செல்வார்.

ஒரு கட்டத்தில் அவரது தந்தை, 'தன் மகன் எப்போதும் படித்துக் கொண்டே இருக்கிறானே' என்று பயந்தே போய்விட்டார். அதனால், மகனின் மனநிலையை மாற்ற நினைத்தார். தனது மகன் உல்லாசமாக பொழுதை கழிக்க வேண்டும் என்று எண்ணி ஒரு படகை வாங்கி கொடுத்தார். ஆனால், ஹைமரோ, இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை பார்க்க வேண்டும் என்று விரும்பினார். அதனால், தந்தை வாங்கி கொடுத்த படகில் ஏறி, அட்லாண்டிக் கடலைக் கடந்து இங்கிலாந்து நாட்டுகே சென்று விட்டார்.

ஓபன் ஹைமர் படித்து முடித்த பின்னர், அவருக்கு பல பல்கலைக்கழகங்களில் இருந்து அழைப்பு வந்தது. கடைசியாக, அவர் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.

வேலையில் சேர்ந்த முதல் நாளே அந்தப் பல்கலைக்கழகத்தின் டீன் அவரிடம் வந்து "ராபர்ட் உனக்கு பல பல்கலைக்கழகங்களில் இருந்து அழைப்பு வந்தும், நீ ஏன் இந்தப் பல்கலைக்கழகத்தைத் தேர்ந்த்தெடுத்தாய் ?" என்று கேட்டார். அதற்கு ஓபன் ஹைமர், "இங்குள்ள நூலகத்தில் 16 மற்றும் 17 - ம் நூற்றாண்டைச் சேர்ந்த சில பழைய பிரெஞ்சுக் கவிதைகளை நான் ஒரு முறை படித்தேன். அவற்றை மீண்டும் படிக்க வேண்டும் என்ற ஆவலில் தான் இங்கு வந்து சேர்ந்தேன்" என்றார்.



தகவல் : தினத்தந்தி.

0 comments:

Post a Comment