Wednesday, July 20, 2011

இஸ்ரேல் காஸ்ஸாவில் 3 ஆயிரம் டன் குண்டுகளை வீசியுள்ளது


காஸ்ஸா,ஜன:கடந்த 2008 ஆம் ஆண்டு 22 நாட்கள் நீண்ட கொடூரமான காஸ்ஸா தாக்குதலின்போது இஸ்ரேல் காஸ்ஸாவின் மீது பேரழிவை ஏற்படுத்தும் 3 ஆயிரம் டன் குண்டுகளை வீசியுள்ளது.

ஆயுதக்கிடங்கில் சேமித்து வைத்திருந்த கொடூரத் தன்மைக் கொண்ட குண்டுகளை காஸ்ஸா போரின்போது ஃபலஸ்தீன் மக்கள் மீது இஸ்ரேல் வீசியதாக காஸ்ஸா போலீஸ் எக்ஸ்ப்ளோசிவ் என்ஜினீயரிங் டைரக்டர் மேஜர் தெஹ்ஸின் ஸாத் கூறியதாக ஃபலஸ்தீன் இன்ஃபர்மேசன் மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பல்வேறு வகையான குண்டுகளை சாதாரண மக்களையும், வாகனங்களையும் குறிவைத்து இஸ்ரேல் வீசியதாக தெஹ்ஸின் ஸாத் கூறுகிறார்.

கேன்ஸர், மலட்டுத்தன்மை போன்ற கொடூரமான நோய்களை உருவாக்கும் தன்மைக் கொண்ட வெள்ளை பாஸ்பரஸ், டங்ஸ்டன், யுரேனியம் உள்பட சர்வதேச அளவில் தடைச் செய்யப்பட்ட வெடிப்பொருட்களை இஸ்ரேல் காஸ்ஸாவின் மீது பிரயோகித்தது.

தரைமார்க்கம், வான்வழி, கடல்வழி என மூன்று வாரம் நீண்ட கோரமான தாக்குதலில் 1400 ஃபலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். 1600 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டது.

காஸ்ஸாவில் இஸ்ரேல் நடத்திய கொடூரமான மனித உரிமை மீறல்கள் குறித்து முன்னாள் தென்னாப்பிரிக்க நீதிபதி கோல்ட்ஸ்டோன் தலைமையிலான ஐ.நா விசாரணைக் குழு கண்டறிந்திருந்தது. விசாரணைக் கமிஷன் தாக்கல் செய்த 575 பக்கங்களைக் கொண்ட அறிக்கையில் காஸ்ஸா போரின்போது இஸ்ரேல் நடத்திய கொடூரங்களின் 7 உதாரணங்களை மேற்கோள் காட்டியிருந்தது.

செய்தி:தேஜஸ்

நன்றி : தினக்ஸ் வலைப்பூ

0 comments:

Post a Comment