
'ஆம்' என்பதற்கு ஏன் தலையை மேலும், கீழுமாகவும், 'இல்லை' என்பதற்கு தலையை இடம் வலமாகவும் அசைக்கிறோம் என்று தெரியுமா ?
பரிணாமவியல் தந்தையான சார்லஸ் டார்வினின் கருத்துப்படி, 'ஆம்' என்பதற்கும், ' இல்லை' என்பதற்கும் தலையை அசைப்பது சிசுவாக இருக்கும்போதே தோன்றிவிடுகிறது.
குழந்தை பருவத்தில் பின்பற்றிய உணவுப் பழக்கத்தில் இருந்து இது வந்தது.
சிசு தலையை அசைத்து முன்னேறுவது, தாயின் மார்பகத்தை தேடுவதாகும். பால் பருகியபின் பக்கவாட்டில் தலையை ஆட்டுவது, குழந்தைக்குப் பசியில்லை அல்லது எதுவும் தேவையில்லை என்பதைக் குறிக்கிறது என்கிறார் டார்வின்.
இந்தக் கருத்துக்கு ஆதரவாகச் சொல்லப்படும் செய்தி, காது கேட்காமலோ, கண் பார்வை இல்லமலோ பிறக்கும் குழந்தைகளும், இதே போன்ற வகையில்தான் வளர்ந்த பின்னரும் தலையை ஆட்டும், அசைக்கும்.
தகவல் : தினத்தந்தி
0 comments:
Post a Comment