தாமஸ் ஆல்வா எடிசன் வெறித்தனமாக ஆராய்ச்சி செய்பவராம். ஒரு முறை பார்ட்டி ஒன்றுக்கு வலுக்காட்டாயமாக இழுத்து செல்லப்பட்டார். சிறிது நேரத்திலேயே வெட்டிப் பேச்சு விவகாரங்கள் அவருக்கு அலுத்து விட்டது.
யாரும் கவனிக்காதபோது நைசாக நழுவினார் எடிசன். அந்தோ பரிதாபம்! வாசல் கதவைக் கண்டவராக அதை நோக்கி விரைகையில் தோளில் ஒரு கை.
“இப்போ என்ன ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருக்கிறீர்கள் மிஸ்டர் எடிசன்?” என்று கேட்டார், கைக்கு சொந்தக்காரர், பார்ட்டி தருபவர். பதில் சொல்லாமல் இருக்க முடியாது.
“வெளியே போகிற வழியை!” என்று பதில் தந்து விட்டு நடையைக் கட்டினார் எடிசன்.
தகவல் : லைவ்பிளானட் வலைப்பூ
0 comments:
Post a Comment