Saturday, August 27, 2011

பார்வையாலே நகலெடுத்தவர் !


ஜான் ஆல்பர்ட் ராண்டி என்பவர் 18-ம் நூற்றாண்டில் போலாந்து நாட்டில் வாழ்ந்த புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர். வாழ்ந்த புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர்.

இவர் சுவீடனில் உள்ள உப்சாலா, ஸ்டாக்ஹோம் நகரங்களுக்குச் சென்று அங்குள்ள அரசு நூலகங்களில் சில முக்கிய வரலாற்று நூல்களைப் பிரதியெடுக்க விரும்பினார்.

அரசாங்கம் அதற்கு அனுமதி தரவில்லை. நூல்களை அங்கேயே உட்கார்ந்து படிக்கலாமே தவிர பிரதி எடுக்க கூடாது என்று கூறிவிட்டனர்.

எனவே, ஆல்பர்ட் ராண்டி அந்த நூலகத்தில் அமர்ந்து தேவைப்படும் நூல்களைக் கவனத்துடன் படித்து மனதில் பதியவைத்துக் கொண்டார். பின்னர் இரவில் அவற்றை ஞாபகப்படுத்தி, எழுதிவைத்துக் கொண்டார். இவ்வாறு, தேவையான நூல்களின் முக்கியப் பகுதிகளைப் பிரதி எடுத்துவிட்டார் ராண்டி.


தகவல் : தினத்தந்தி.

குறிப்பு : திரு.ஜான் ஆல்பர்ட் ராண்டியின் படம் கிடைக்கவில்லை. இது உதாரணத்திற்க்கு வைக்கப்பட்ட படம்.

0 comments:

Post a Comment