Thursday, August 25, 2011

வறுமை - தத்துவவாதிகள் சொத்தா ?

தத்துவத்துக்கு வறுமை, செல்வம் இரண்டும் ஒன்றே !

பிளாட்டோ, ரஸ்ஸல் போன்ற மிக வசதியாக வாழ்ந்த தத்துவ மேதைகளும் உண்டு. மார்க்கஸ் அரேலியஸ், ரோம் நாட்டின் மன்னர். அதுவே, டயோஜினீஸ் போல, கோவணத்துடன் அழைந்த தத்துவவாதிகளும் உண்டு.

கி.மு.341-ல் பிறந்த எபிக்யூரஸ் என்கிற தத்துவ அறிஞர் 'மனிதனுக்கு உடல்ரீதியாக மகிழ்ச்சியான, சுகமான, ருசியான விருந்து என்பது உன்னதமான ஒன்று. அதுவும் நல்ல நண்பர்களோடு அமர்ந்து விருந்து உண்பதற்கு இணையே கிடையாது !' என்றார். இது கேட்டு மற்ற தத்துவ அறிஞர்கள் கடுப்படைந்தார்கள்.










எபிக்யூரஸ்







அகராதியின் படி Epicurean என்றால் மகிழ்ச்சிக்காக வாழ்வது (devoted to pleasure) என்று பொருள். ஆனால்,உண்மையில் எபிக்யூரஸ் எளிமையான வாழ்க்கையைத்தான் பின்பற்றினார் என்பது பிற்பாடுதான் தெரிய வந்தது. எபிக்யூரஸ் சொன்ன இன்னொரு விளக்கம் ' செல்வம் ஒரு பிரச்சனை அல்ல. அதற்காக கூச்சப்படவும் வேண்டியது இல்லை.

ஆனால், நிறைய பணம் இருந்தும் சிறந்த நண்பர்கள், சுதந்திரம், ஆராயப்படாத வாழ்க்கை இல்லாமல் போனால், நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. பணம் இல்லை என்றாலும், இதெல்லாம் இருந்தால் போதும். மகிழ்ச்சியாக வாழ முடியும். அதுவே, இதெல்லாம் இல்லாமல் பணம் மட்டுமே இருந்தால். அது மகிழ்ச்சியான வாழ்க்கை இல்லை.


தகவல் : மதன், விகடன்

0 comments:

Post a Comment