Thursday, August 18, 2011

உலகம் நமக்கு எதிராக இருக்கிறதா ?


மனித சுபாவம் அப்படி
நீங்கள் உட்கார்ந்தால்
அவர்கள் சொல்வார்கள்
உட்காரதே.

நின்றால் சொல்வார்கள்
உனக்கு என்ன பிரச்சனை
நடக்கக் கூடாதா ?

நடந்தால் சொல்வார்கள்
அவமானம்
உட்கார் நீ.

நீங்கள் தாள முடியாமல்
படுத்தால் சொல்வார்கள்
எழுந்து நில்.

நீங்கள்
படுக்கவில்லையானால் சொல்வார்கள்
கொஞ்சம் படுக்கலாமில்லையா ?

விழிப்பதும் தூங்குவதுமாக என் வாழ்வை
நான் வீணாக்கிக் கொண்டிருக்கிறேன்
நான் இக்கணமே இறந்துபோனால்
அவர்கள் சொல்வார்கள்
நீ வாழ வேண்டும்.

நான் வாழ்வதைப் பார்த்தார்களானால்
யாருக்குத் தெரியும்
அவர்கள் சொல்வார்கள்
நீ இருப்பதே அவமானம்
செத்துத் தொலை.

அதீத பயத்துடன்
ரகசியமாக
நான் தொடர்ந்து
வாழ்ந்துகொண்டிருக்கிறேன் !"

---- தஸ்லிமா நசுரீன்

வங்காளக் கவிஞர் தஸ்லீமா நசுரீனின் சொந்த வாழ்க்கையை இந்தக் கவிதை பிரதிபலிப்பதாக இருந்தாலும் கவிதையின் உள்ளடக்கம் எல்லோருக்குமானதே !"

தகவல்: மாணிக்கவாசகம், மதுரை.

குறிப்பு :

தஸ்லிமா நசுரீன்
வங்காளதேசத்தை சேர்ந்த ஓர் எழுத்தாளரும் முன்னாள் மருத்துவரும் ஆவார். 1980களில் எழுதத் தொடங்கி சமயங்களையும் திட்டவட்டமான இஸ்லாமையும் எழுத்துகளில் கண்டனம் செய்து, பெண்ணியத்தைப் பற்றி எழுதி உலகில் புகழுக்கு வந்தார். இஸ்லாமுக்கு எதிராக எழுதினது காரணமாக வங்காளதேசத்துக்கு திரும்பி செல்லமுடியாத நிலையில் சுவீடனுக்கு வெளியேறினார். 2008இல்திரும்பி இந்தியாவுக்கு வந்து உச்ச பாதுகாப்பு நிலையில் தில்லியில் தற்போது வசிக்கிறார்.

தகவல் : தமிழ் விக்கிபீடியா.

2 comments:

Post a Comment