Tuesday, August 2, 2011

கடல் காடுகள்


நதிகள், ஒடைகள், போன்றவற்றின் பிறப்பிடம் காடுகள் தான். அவை தான் நீரின் ஆதாரம்.ஆச்சரியமாக நீருக்கு அடியிலும் காடுகள் இருக்கின்றன. நீர்காடுகளில் இரண்டு வகை உள்ளன.

முதல் வகையை அலையாத்தி காடுகள் என்கிறார்கள். இது பெரும்பாலும் கடல் நீருக்கு அருகிலேயே வளரும். இந்த தாவரங்கள், தண்டுகளிலும், கிளைகளிலும், உள்ள தூவாரங்களின் மூலம் ஆக்சிஜனை உள் இழுத்து கொள்ளும். நீர்மட்டம் அதிகரிக்கும் போது, சிறிய குழல்களை வெளியே நீட்டி சுவாசிக்கும்.

கடலுக்கு அருகில் இருந்தாலும், உப்புதன்மையை வடிகட்டியே நீரை எடுத்துக் கொள்ளும்.இதன் இலைகள் மூலமாக நீர் ஆவியாதல் மிக மெதுவாகவே நடக்கும்.சுனாமி, கடல் கொந்தளிப்பு போன்ற காலங்களில் அதன் வேகத்தை கட்டுபடுத்தி, இந்த அலையாத்தி காடுகள் நம்மை காப்பற்றுகின்றன.

உலகின் மிகப்பெரிய அலையாத்தி காடுகள் பிரேசிலில் உள்ளன. இதன் பரப்பளவு 25 ஆயிரம் சதுர கிலோ மீட்டர். இரண்டாவது இடம் பெறுவது நமது பீச்சாவரம் கடற்கரை.


தகவல் : தினத்தந்தி

0 comments:

Post a Comment