Sunday, August 28, 2011

சிசேரியன் வார்த்தை பிறந்த விதம் !


அந்த நாட்களில் குழந்தை பிறந்ததும் சில தாய்மார்கள் இறந்துபோக நேர்ந்துவிடுவதை 'தாயின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு பிறந்தது' என்று குழந்தையைக் குறிப்பிட்டுச் சொல்வார்கள். இப்போது பெரும்பாலான பிரசவங்கள் தாய்மார்களின் வயிற்றைக் கிழிந்தபடிதான் நடக்கின்றன. மருத்துவர்கள் இந்தப் பிரசவத்தை 'சிசேரியன்' என்று சொல்கிறார்கள். இந்த சிசேரியன் என்ற சொல் பிறக்க காரணமானவர் ரோமாபுரி மன்னன் ஜீலியஸ் சீசர்.


சீசர் தன் தாயின் வயிற்றில் இருந்தபோது, பிரசவ நேரத்தில் இயற்கையான முறையில் பிரசவிக்கச் செய்ய இயலாது என்றறிந்த அந் நாளையை மருத்துவர்கள், தாயின் வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியே எடுத்தார்கள். பிற்காலத்தில் அதுபோன்ற பிரசவங்களுக்கு சீசர் பெயர் மருவி 'சிசேரியன்' ஆகியது.


தகவல் : முத்தாரம்.

0 comments:

Post a Comment