Tuesday, August 2, 2011

சொல்வனம்


மனிதனின் செல்வம், புகழ், பெருமை நிலைக்கக் கூடியதல்ல. அவன் காலத்திலேயே மாறும் அவன் சந்ததி காலத்திலும் மாறும். ஆகவே அதை சம்பாதிப்பதே முடிந்த முடிவு என்றெண்ணுவது முட்டாள்தனம்.

- பெரியார், ('விடுதலை' - 28.04.1943)

உலகிலே நிறத்தின் காரணமாகக் காட்டப்படும் வேற்றுமை, உயர்வு தாழ்வு ஒரளவுக்கு மாற்றமடைந்து கொண்டு வருகிறதென்றாலும் துரதிர்ஷ்ட வசமாக இந் நாட்டிலே இவ்வுப கண்டத்தில் மட்டும் பிறவியின் காரணமாக, தொழிலின் காரணமாக கற்பிக்கப்பட்டிருக்கும் உயர்வு தாழ்வு சட்டப்பூர்வமாக இருந்து வருவதுடன் அதைப் புதுப்போர்வையில் மறைத்து நிரந்தரமாக நிறைபெறச் செய்வதற்காக சூழ்ச்சியும் செய்யப்பட்டு வருகிறது.

- பெரியார், ('விடுதலை' - 23.03.1942)

தமிழில் எழுதப்படும் புத்தகங்கள் தமிழ்ச் சொற்கள் கொண்ட புத்தகங்களாகவே இருக்க வேண்டும் என்பதே தமிழர் விருப்பம்.

- பெரியார், ('விடுதலை' 17-05-1941)
தோழர் தமிழச்சியின் முகப்புத்தகத்திலிருந்து......
http://www.facebook.com/tamizachi.france

0 comments:

Post a Comment